Monday, February 3, 2014

ஒரு புலி நியாயம் பேசுகிறது !!!


         நேற்று எம்மை உசுப்பி விட்டு ஓடி ஒழித்தவர்கள் இன்று எம்மை சமாதி கட்டிவிட்டும் அதை அரசியல் ஆக்குகிறார்கள் ! அன்று துவக்கு துவக்கு போரை என்றவர்கள் துரோகிகளாய் சுயரூபம் காட்டினார்கள் அதுவும் சுயநல அரசியலே ! எமது உணர்வுகள், வேட்கைகள் , இலட்சியம் என்பவற்றை துறந்து இத்தகு சுயநலத்தில் நாமும் அடிவைத்தோம் ! மாற்று வழி இல்லை .உலகை ஆளும் முதலாளித்துவம் கற்றுத் தந்தது இது மட்டும்தான் . 


           விடுதலை என்ற மூலதனத்தை இட்டு யுத்தம் என்ற வியாபாரத்தை நடாத்த பலர் உதவினர் .ஈழத்தை இலாபமாக காட்டினர் . எமது சமூக அழிவுகளில் அனுதாபத்தை வைத்து எம்மை 'டெவலப்' செய்யும் அரசியல் நன்றாகவே வேலை செய்தது . அனுதாபம் என்ற 'பொலிடிக்ஸ் 'நிறையவே இலபாகரமானது .அதனால் பதுங்கித் தாக்க எம் மக்களையே மணல் மூடைகள் ஆக்கவும் நாம்  தயங்கவில்லை . வீரச் சாவு ,தாயக மண் என்ற தாரக மந்திரங்கள் இளம இரத்தங்களால் களத்தை சூடாக்கியது ! இளவு காப்பது போல் பலர் கனவு கண்டனர் . அதில் சுந்தரத் தமிழ் ஈழம்  தெரிந்தது . 

        நம்பியவர் கழுத்தருப்பதும் ,நம்பவைத்து கழுத்தருப்பதும் இந்த கேடுகெட்ட முதலாளித்துவ அரசியலில் ஒரு கடமை போன்றது . ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு பக்காவான நியாயம் வைத்திருப்பார்கள் . அது அலறி மாளிகையாக இருந்தாலும் வைட் ஹவுஸ் ஆக இருந்தாலும் ஒன்றுதான் . அது எம்மிடமும் இருந்தது .யாரும் விரும்பினாலும் ,விரும்பாவிட்டாலும் ,நம்பினாலும் ,நம்பாவிட்டாலும் திரும்பத் திரும்ப சொல்வோம் . ஹிட்லரின் வலதுகை 'கோயபல்சு ' சொன்னது "இல்லாத ஒன்றை திரும்ப திரும்ப சொன்னால் இருப்பதாக ஆகிவிடும் . 'ஹிட்லரை ' அழித்து விட்டு ஹிட்லரிசத்தை தொடர்கிறது கூட்டு முதலாளித்துவம் .நாமும் பயன் படுத்தினோம் அது தப்பா !?

          ஜோர்ஜ் புஷ் ,பரக் ஒபாமா , சிமோன் பெரஸ் ,நெதன்யாகு , இப்படி அடுக்கிக் கொண்டு செல்லும் லிஸ்டில் இல்லாத விடயங்களையா எம் தலைவர் செய்தார் !? சாபிரா ,சாதிலாவில் யூதன் செய்தால் ஜீரனித்த உலகுக்கு காத்தான்குடி ,ஏறாவூரையும் ஜீரனிக்கத் தெரியும் .பாலஸ்தீனில் விரட்டியது போலவே வட தமிழ் கற்பனை ஈழத்திலும் செய்தோம் . அவர்கள் அரசு நாம் இயக்கம் அதுதான் வித்தியாசம் . இன்றைய பர்மாவை போலவே நாளைய சிறீ லங்காவுக்கும் ஒரு முஸ்லீம் நாட்டின் தலைவரின் மனைவி வந்து போகலாம் ! அது என்ன எமக்கு மட்டும் பாசிசம் எனும் பெயர் !? அயோக்கியமான சர்வதேச பாசிசத்தில்  நாமும் ஒரு துளி என்று கூறுங்கள் மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறோம் .

        இராமரையும் இந்து மதத்தையும் வைத்து போடும் இந்திய அட்டகாசம் போலவே புத்தரையும் ,பௌத்த மதத்தையும் வைத்து இலங்கையில் இன்று அட்டகாசம் தொடர்கிறது . இந்த கேவலமான அரசியல் உங்களுக்கு புரிகின்றதா !? கோல் வால்கருக்கும் ,அநாகரீக தர்மபாலவுக்கும் இடையில் உள்ள பூர்வீக உறவு புரிகின்றதா !? இரண்டும் அசிங்கத்தை வைத்து பிழைப்பு நடாத்தும் காவிகள் . துப்புக் கெட்ட ஜனநாயகம் இத்தகு மதப்பிசாசுகளை போசித்து வளர்க்கிறது .அது பாசிசம் இல்லையா !? மனித விழுமியங்களை மதிக்காத  கொலைகார பசியை அது பெரும்பான்மை மீது தூண்டுகிறதே !இது சரியா !? நாம் ஈழத்தை இஸ்ரேல் ஆக்க துடித்தோம் அது பயங்கர வாதம் என்றால் ,இந்தியாவையும் இலங்கையும் இஸ்ரேல் ஆக்கத் துடிக்கும் இவர்கள் பயங்கர வாதிகள் இல்லையா !? மக்கிப்போக காலம் எடுத்தால் மறுபடியும் சில பதிவுகளோடு வருவேன் .

No comments:

Post a Comment