Monday, October 28, 2013

இது தாண்டா அசல் அரசியல் சாக்கடை !


சுயநலத்தை மூலதனமாக்கிய பக்கச்சார்பு வியாபாரம் ! - அது 
முதலாளித்துவம் கற்றுக்கொடுத்த கொடிய சாபம் !
இங்கு இலாபம் கிடைக்குமானால் நியாயம் அநியாயம் ஆக்கப்படும் !
தாரம் வாங்க தாய்கூட தேவைப்பட்டால் ஏலம் விடப்படுவாள் !
விபச்சார தரிசனங்கள் விளம்பரமாகி காம மொழியோடு 
வீதியெங்கும் பெண்ணுரிமை பேசும் !


வளக்  கொள்ளை சூத்திரத்தில் இங்கு படுகொலைகள் 
இறுமாப்போடு இராஜ தந்திரமாக ஆகும் !
பச்சைக் குழந்தையும் அதனால் பயங்கரவாதி ஆக்கப்படுவான் !
இந்த போட்டிச் சந்தையில் மனிதம் 'MONEY ' யை வைத்தே மதிக்கப்படும் !
வட்டியை இரைபோட்டு கடனுதவித் தூண்டிலில் சிக்கிய கௌரவங்கள் 
ஆயுள் கைதி ஆவது அன்றாட நிகழ்வு !

அதிகாரக் கதிரைக்காக ஆடு நனைகிறதே என அழும் ஓநாய்களும் !
முதலைக் கண்ணீர் வடிக்கும் கணவான்களும் 'ஜனநாயக 'குடையோடு 
இங்கு அடிக்கடி தரிசனம் தருவார்கள் !
சாதி ,மத ,இன பேதம் காட்டி பெரும்பான்மையை உசுப்பேத்தி 
பலிக்கடா அரசியல் பக்குவமாய் அரங்கேற்றம் பெறும் !

நீதி,நியாயம்  'பிலிம்' காட்டி தீர்வென்ற 'தியடரை ' HOUSE FULL  'ஆக்க 
குண்டர்களின் தொண்டர்களாய் 'மீடியாக்கள் ' என்றும் பவனி வரும் !
அவை 'ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவதை 'LIVE SO' போட   
ஏமாந்த 'சோன கிரிகளாய் ' அதை நாமும் பார்த்து மகிழ்வோம் !

மது ,சூதை சுதந்திரமாக்கி குடிகெடுக்கும் ORDER போட்டு 'ஹலாலை' 
விரட்ட இலங்கையில்  காவிகள் படை எடுப்பதில் புரியவில்லையா உனக்கு !இது 'VIRUS ' இனை வைத்தியர் ஆக்கிய
அபாயச் சாக்கடை என்பது !? - 'ஊர் ஓடின ஒத்தோடு 'என்னும் உறுப்படாத தத்துவத்தில் பன்றிக்கறி பரிமாறும் பந்தியில் அதன் 'கிட்னியை ' சுவைப்பதுதான் முஸ்லிமின் சூழ்நிலை அரசியலாம் !
இதுதான் உம்மத்தின்  மூத்தோரின் அமுத வாக்காம் !!!







    

No comments:

Post a Comment