Thursday, October 31, 2013

அந்த நாள் மறந்து விட்டதா ?





                                                              அந்த நாள் மறந்து விட்டதா ? இந்த முஸ்லீம் உம்மத்தின் மீது உத்தியோக பூர்வமாக தாகூத்திய அடிமை சாசனம் வரையப்பட்ட நாள் . காசா முதல் காஸ்மீர் வரை கந்தலாக்கப்பட்ட இந்த முஸ்லீம் உம்மத்தின் உயிர் ,உடமை மானம் பற்றி தட்டிக்கேட்க நாதியற்றதாக்கி  அல்லாஹ்வின் அடிமை மட்டுமே என்ற கண்ணியத்தின் வரலாறு ;தேசம் ,தேசியம் , அரபி ,அஜமி , வெள்ளையன் ,ஆபிரிக்கன் என்ற எல்லைக் கோடுகள் மூலம் களங்கப் படுத்தப் பட்ட நாள் .


                            இஸ்ரேல் எனும் இரக்கமற்ற இரத்தக் காட்டேரி தன்னை சுற்றியிருந்த அரசியல் விலங்கின் பூட்டை உடைத்து தனது சாவகாசமான சரித்திரப்  படுகொலைகளுக்கு சொடுக்குப்போட்டு பாதை அமைத்த நாள் . போஸ்னிய புதைகுழிகளில் குற்றுயிராய் கதறிய இந்த உம்மத்தின் அழைப்பாக " இஸ்லாத்தின் படை எங்கே ?" எனும் வினாவுக்கு வெட்கித்துப்போய்  மௌனத்தை பதில் அளிக்க ஏதுவாய் அமைந்த நாள் . 

          சிந்துவில் எம் உம்மா சிதறடிக்கப் பட்டபோதும் ,காவித் துரியோதனர்கள் துகில் உரித்து எம் சகோதரிகளை மானபங்கப் படுத்திய போதும் "இன்னொரு முஹம்மது பின் காசிம் வரமாட்டாரா ? " என்ற வினாவுக்கு 'பொலிடிகல் டிப்லோமடிக்' புரியாது கண்ணீரோடு வெறுங்கை ஏந்தி பிரார்த்தனை மட்டும் புரிந்த நாள் .   மியன்மாரின் படுகொலை நாடகத்தில் அரசியல் திருப்பத்தின் இரத்த சாட்சியமாய் இந்த உம்மத்தின் உதிரங்கள் விலைபேசப் பட்டபோது மாதக்கணக்கில் வேடிக்கை பார்க்க வைத்த நாள் .
  

                     மொத்தத்தில் முஸ்லீம் எனும் சகோதரத்துவ சிந்தனை திசைமாறி ; குப்பார் வீசிய பிச்சைப் பாத்திரத்தில் வாழ்க்கை குதிரைஒட்டி சுகம் காண்பதில் சுவனம் நுழையலாம் எனும் ஜாஹிலீயத் மார்க்கமாக முஸ்லிமின்  தலையில் ஏறி யகூதிய கடிவாளத்தை சிலுவையின் முகவரியோடு பூட்டிய நாள் .  அது எந்த நாள் ?? இஸ்லாத்தின் ஒரே தலைமையும் , அரசியல் இராஜ தந்திர கேடையமுமான  இஸ்லாமிய கிலாபா வீழ்த்தப்பட்ட நாள் . அது ஹிஜ்ரி 1342  ரஜப் மாதம் பிறை 28 . 


                          ஆனால் இது முடிவுரை எனும் தப்புக் கணக்கில் யூத ,கிறிஸ்தவ  எதிரிகளால் கொக்கரிக்கப்பட்ட வார்த்தைப் புரளி என்பது புரியும் காலம் வெகுதூரத்தில் இல்லை . நம்புங்கள் அந்த முஹம்மதின் (ஸல் ) படை மீண்டும் வரும் ;ஏனென்றால் "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் நிச்சயம் அழிந்து போவதே " 
   

         நீங்கள் அல்லாஹ்வுக்கு (சுப ) உதவி செய்தால் அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதிப் படுத்துவான் . அவன் கேட்கும் உதவி நீங்கள் அவன் பிரதிநிதி என்பதை உறுதிபடுத்த நிபந்தனை அற்று அவனது மார்க்கத்தை மீண்டும் சக்தியாக்க உதவுங்கள்  என்பதே . அல்லாஹ்வின் தூதருக்கும் (ஸல் ) அந்த சஹாபாக்களுக்கும் உதவிய அதே ஜிப்ரீல் (அலை ) தனது வானவர் படையோடு எமக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார் . அல்லாஹு அக்பர் ............
             

No comments:

Post a Comment