Saturday, October 5, 2013

சத்திய மீள் வருகையின் சாட்சியம் கூறும் 'ஷாம்' எனும் சிரியா !


 'மலா இகாக்கள்' இறக்கை விரித்துள்ள அற்புத பூமியது !
'அபுதால்கள்' வாழும் அதிசய நிலம் அது !
அவர்களை நீர் அறிவீரா !? நபிமார்களின் பின் 
அவர்தம் பணியை அயராது தொடர வந்த புனிதர்கள் !

மதிகெட்ட மாக்களால் மார்க்கம் மிதிக்கப் படும்போது 
இந்த நன்மக்களால் அதன் உயிரோட்டம் 
தெளிவோடு கொடுக்கப்படும் - அந்த அறிமுகமற்றவர்கள் 
இங்கே  இருந்துதான் உதித்து எழுவார்கள் !
மக்கா ,மதீனாவுக்கு பின் மதிப்போடு 'வஹி' பேசிய 
வசந்தத்தின் உறைவிடம் அது அஷ் ஷாம் !


பல நூற்றுக் கணக்கான நபித் தோழர்கள் ,தாபியீன்கள் 
தபஹ் தாபியீன்கள் தெளிவோடு தாவிய தியாகத்தின் மடி !
அந்த அல்லாஹ்வின் திருப்திக்காய் தம் வியர்வையாலும் 
இரத்தத்தாலும் உரமிட்டுவிட்டு அவனை 
இன்முகத்தோடு சந்திக்க நேற்றுச் சென்றவர்களின் 
இன்றைய சந்ததி தான் 'ஷாமில்' தீனுக்காக 
களமாடும் மாவீரர்கள் என்பது புரிகின்றதா !?

கோழிக் கூண்டுக்குள் தம் குடும்பத்தை குழந்தைகளோடு 
குடியிருக்க வைத்துவிட்டு சத்திய சாம்ராஜ்யத்தை 
இம்மையில் ஒரே இலக்காக்கி வேட்கையோடு 
புறப்பட்டுள்ள வேங்கைகள் அவர்கள் !
'சஹாதத்தை' விலையாக்கி 'பசர் அல் அசாத் 'எனும் 
காலம் கடந்த காலனித்துவ செருப்பை ஓரம்கட்டி 
நுபூவத்தின் வழியில் கிலாபத்தை கொண்டுவர 
துணிவோடு உழைக்கும் நியாயத்தின் நிஜ வடிவங்கள் !

ஓ முஸ்லீம் உம்மாவே ! அவர்கள் உணவிழந்து , உடையிழந்து 
உறைவிடமிழந்தும் இலட்சிய உணர்வை இழக்கவில்லை !
சொத்துக்களை ,சொந்த பந்தங்களை , நேற்றுவரை பூத்துக் 
குலுங்கிய பயிர் நிலங்களை இப்படி எல்லாமே இழந்தும் 
'தாகூத்திய' பேய்களின் சமரச பேரத்தில் சரணடைந்து போகவில்லை 
தேசிய குட்டிச் சுவர்களால் ஒரு சுயநல வீடுகட்டி 
'டொலர் 'மனம் கமழ 'DONKEY' களாக அவர்கள் மாறிவிடவுமில்லை !
சாத்தானிய சதிகளில் சிக்கி 'இகாமதுத் தீனை ' 
'இளவு ' காக்கவும் இவர்கள் தயாரில்லை !

ஆட்டிப்படைத்த ஏகாதிபத்தியங்கள் அதிர்ந்துள்ளன !
அதன் தலைவர்களோ உறக்கமற்று தவிக்கிறார்கள் !
'சியோனிசம் ' தெளிவாகவே சில்லிட்டுப் போயுள்ளது !
அது தனது நாளைய போக்கிடத்தை புரியாது அஞ்சுகிறது !
இருட்டை ஒளி போல் காட்டும் இவர்களின் அயோக்கிய மீடியாக்கள் 
இப்போதும் தம் குருட்டுத் தத்துவத்தின் இறுதி நம்பிக்கையில் 
அண்டப் புளுகுகளை அடங்காமல் வாசிக்கின்றன ! ஏன் !?
அது இஸ்லாமிய 'கிலாபாவே ' இறுதித் தீர்வென்ற 
அஷ் ஷாமின் அஞ்சாத வார்த்தைகளால் !

ஓ முஸ்லீம் உம்மாவே ! அந்த தூய்மையான கேடயம் 
உனக்கும் சேர்த்துதான் என்பதை  புரிந்து கொள் ! இன்னும் நீதியையும் 
நியாயத்தையும் வேண்டும் ஒவ்வொரு மனிதனதும் 
அவலத்தையும் போக்கும் அற்புதத் தீர்வது ! - தவிர 
'குப்ரிய ' குப்பைமேட்டில் பொறுக்கித் தினனும் கையேந்தி ஆக 
எல்லாம் வல்லவன் முஸ்லீம் உம்மாவை ஆக்கிவிடவில்லை !

பகட்டான பாரசீக சாம்ராஜ்யத்திடம் 'ருபுஹா பின் ஆமிர் ' சொன்ன 
அதே விடுதலை வார்த்தைகளான  ! "மனிதன் மனிதனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதை விட்டும் அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டு வாழ 
அனுப்பப் பட்ட சமூகம் என்பதையே ...பசர் அல் அசாதுக்கும் ,
பரக் ஒபாமாவுக்கும் , விளாடிமிர் புடினுக்கும் ,இவர்களின் கைக்கூலிகளுக்கும் 'அஷ் ஷாமின் ' நடப்புகள்  சொல்லி நிற்கின்றன !

ஓ மனிதா! உன் உண்மையான சுதந்திர தினம் வெகுதூரத்தில் இல்லை 
'இன்ஷா அல்லாஹ்' என்ற சுப செய்தியையே இன்றைய ஷாம் எனும் 
சிரியா கற்றுத்தரும் கௌரவ மொழியாகும் புரிந்ததா !?
அல்லாஹு அக்பர் .... அல்லாஹு அக்பர் .... அல்லாஹு அக்பர் .... !!!





  
                   

1 comment:

  1. புரிந்தது புரிந்தது
    உன் வரிகளின் அழகைவிட
    உன் வரிகளின் ஆழம் புரிந்தது

    உலகை ஆள - மீள வருகிறது
    13நூற்றாண்டு அனுபவத்தோடு
    புதுப் பொலிவோடு
    கிலாபா எனும் பேரரசு

    பேயரஞ்சான் போல் வாடிபோயுள்ள
    பேக்காட்டும் ஏகாபத்தியங்களின்
    போலி வாதங்களை
    கக்கவும் முடியாமல், மெல்லவும் முடியாமல்
    சிக்கித்தவிக்கும் மீடியாக்களின்
    முகத் திரைகளை சரியாகவே கிழித்தீர்

    புரிந்தது புரிந்தது
    உன் வரிகளின் அழகைவிட
    உன் வரிகளின் ஆழம் புரிந்தது

    ReplyDelete