Tuesday, October 1, 2013

முல்லாக்களின் முகவரிகள் !!

(காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு .)

பயணங்கள் முடிவதில்லை !!
அவசியமும் அவசரமும் வேகத்தை அதிகரிக்க
ஆரம்பமானது ஓட்டம் ! சில கோஷங்களாலும் வசனங்களாலும்
கண்கள் கட்டப்பட அசையாத நம்பிக்கையில்
ஒரு பந்தயக்குதிரை போல !

கொடுத்த விலைகள் அதிகம்தான் 
இன்னும் கொடுப்பேன் என் இறைவனுக்காக .
இலக்கை தெளிவாய் சொன்னார்கள் .
பாதையினை தான் அடிக்கடி மாற்றினார்கள்
நேற்று பிழை என்றது இன்று சரியாகும் !
குப்ரிய கொல்லைப்புரங்களிலும் 
'ஹிக்மத் ' மேச்சல்கள் !!!

பன்றிக்கு ஒட்டகத் தோல் போர்த்தி 
குர்பான் கொடுத்தால் ஹலாலாம் !!!
ரகீப் ,அதீதே குழம்பி போய் விடுவார்கள் 
நான் என்ன செய்ய ?! இந்த புதிய 
இஜிதிஹாத் எனக்கும் புரியவில்லை !!
செக்கில் இருந்தாலும் சிலையில் இருந்தாலும்
நக்கித்தான் ஆகவேண்டுமாம் !!??

ஆர்வம் மட்டும்தான் 
இலக்கை நோக்கி பாதை தெளிவற்று 
'குப்ரை ' குளிப்பாட்டி 
சத்திய ஆடை கொடுத்து !!
அந்த சாக்கடைக்கு சந்தனம் பூசி 
தொடரும் எம் இலக்கு நோக்கிய 
பயணங்கள் தான் முடிவதில்லை !!
...............
 

No comments:

Post a Comment