Thursday, October 31, 2013

பிளவு படுத்தப் பட்ட முஸ்லீம் உம்மாவும் , பிரித்து மேயும் மேற்கின் அரசியலும் .

(சவூதி ஒரு பக்கம் ஏமனில் முஸ்லிமை அழிக்க அமெரிக்க ட்ரோன் அட்டாக்குக்கு பேஸ் கொடுத்தல், மறுபுறம் சிறிய விவகாரத்தில் அமெரிக்காவோடு முரண்பாடு இந்த  போலி அரசியல்ஏன் !? 

ஈரான் ஒரு பக்கம் பாலஸ்தீன விவகாரத்தில் கடும் இஸ்ரேல் அமெரிக்க எதிர்ப்பு , மறுபக்கம் சிறிய விவகாரத்தில் அமெரிக்காவுடன் இணைவு இந்த போலி அரசியல் ஏன்? சவூதி அரேபியா ,ஈரான் போன்றவைகளின் அண்மைய அரசியல் நகர்வுகளில் மயக்கம் கொண்ட சிலருக்காக காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு .)


 
              ஓன்று  அமெரிக்காவை அடிவருடும் தென்றல் ! மற்றையதோ வெற்று மீடியா மின்னல் !ஒன்றின் அடிவருடும்  குளிர்ச்சியும் மற்றையதன் எதிர்ப்பு 'இமேஜ் ' எனும்  'நைதரசனும் 'முதலாளித்துவ ஏகாதிபத்திய நிலைப்புக்கு  காலத்தின் தேவைகளே !தவிர முஸ்லீம்கள் தெளிவாகவே ஏமாற்றப் படுகிறார்கள் . இன்னும் நம்ப வைத்தும் கழுத்தறுப்பார்கள் . இந்த வரைவிலக்கணத்தின் கீழ்தான் மத்திய கிழக்கு ,தெற்காசிய முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிலைகள் ,  முதலாளித்துவ 'தாகூத்தால்'  தாபிக்கப் பட்டுள்ளன .


                                                                           பிரித்தானியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கர்சன் பிரபு 1924 ஜூலை 24 இல் 'லௌசான் ' ஒப்பந்தத்தின் பின்னர் தெரிவித்த பிரபல்யமான கருத்து கீழே வருகின்றது .

                                 "இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறிய வேண்டும் . கிலாபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி கண்டதைப் போல உணர்வு பூர்வமாகவோ , பண்பாட்டு  ரீதியாகவோ , வேறு எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தின் முக்கிய விடயம் என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்தி விட்டோம் அது ஒருபோதும் மீண்டும் (கிலாபத்தின் அடிப்படையில் )எழுந்து வராது ; (குறுகிய சுல்தானிச ,தேசிய எல்லைகள் அடிப்படையில் எழுந்து வருவதில் நாம் அஞ்சத்  தேவையில்லை)  ஏனென்றால் நாம் இஸ்லாத்தின் ஆக்க பூர்வமான சக்தியான கிலாபத்தை வீழ்த்தி விட்டோம் .

                                                             இப்போது நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் சவூதி அரேபியா , ஈரான் ,துருக்கி ,கட்டார் ,எகிப்து ,டினூசியா , லிபியா ,ஈராக் ,இந்தோனேசியா , மலேசியா , பாகிஸ்தான் , பங்களாதேஷ் ..... இப்படி ஒரு 'லிஸ்டை ' தயாரித்து பார்த்தால் ;  இத்தகு அரசியல் சகதியில் புரட்டி எடுக்கப் பட்ட சாபக்கேட்டு அரசியலின் வடிவங்களாகவே இன்று காட்சி தருகிறார்கள் .

                                                             இதற்குள் இருந்து தமது கௌரவ தென்றல் களையும் , கௌரவ மின்னல் களையும் காலத்தின் தேவை கருதி ஏற்படுத்தி விடுவதே முதலாளித்துவ ஏகாதிபத்திய சந்தைக்கு கொழுத்த இலாபத்தை பெற்றுத்தரும் விடயமாகும் . இத்தகு அரசியலில் சேர்த்தல் ,கூட்டல் , கழித்தல் அழித்தல் , அளித்தால் பக்குவமாக நாடக பாணியாக (நேரடி ,மறைமுகமாக ) முதலாளித்துவத்தால் மேற்கொள்ளப்படும் என்பதே 1924 இன் பின்னரான  தொடர் நிகழ்வு .


                                                                              இந்த வரிசையிலே தான் சவூதி ,ஷியா ஈரான்  என்ற பாத்திரங்களாகும் ; இங்கு இரண்டின் தேவைகளும் அவர்களின் சேவைகளுக்காகவே என்பது பகிரங்க இரகசியம் இந்த நிலையில் முஸ்லீம் உம்மத்தின் முன் தமது துப்புக்கெட்ட 'இமேஜை' தூக்கிக் காட்ட மட்டுமே சிலவேளை (ரசூல் (ஸல் ) அவமதித்தது தொடங்கி ,பாலஸ்தீன் விவகாரம் வரை ) வாய் சவாடல் விடுவார்கள் .

                                        நேற்றைய சல்மான் ருஸ்தியும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான் ,   பலஸ்தீனில் யகூதியும் தனது எல்லைகளை அகற்றிக் கொண்டே செல்கிறான் , அமெரிக்காவில் ஓட்டிய அவமதிப்பு 'ரீளின்' வடு காய முன்னே பிரான்சில் அதற்கு விளம்பரப் போஸ்டர் வெளியிடப்பட்டது . இன்று பெல்ஜியத்தில் புதிய ரீல் விடப்பட்டுள்ளது !!?? இப்படி இஸ்லாத்தின் மீது அவமதிப்பு தொடர்கிறது ,முஸ்லீம்கள் மீது அநியாயமும் தொடர்கிறது , முதலாளித்துவ    ஏகாதிபத்தியத்துக்கு முஸ்லீம்களாகிய நாம் ஒரு கேலிக்குரிய பாத்திரங்களாகி விட்டோம் ! என்பது மட்டும் தான் உண்மை . வாய்சவாடல்களால்  எமக்கு ஆகப் போவது எதுவுமில்லை.


                                                                                           இந்த வெத்து வேட்டுக்கள் வெந்த புண்ணில் ஈட்டியை பாய்ச்சும் பிரச்சாரங்களாகவே ஆகி விடுகின்றன . முஸ்லீம் உம்மத்தின் உண்மையான தீர்வும் , இஸ்லாத்தின் எதிரிகளின் அச்சமும் முஸ்லீம்களாகிய நாம் மீண்டும் ஒரே தலைமையில் ஓன்று பட்டு எழக்கூடிய கிலாபா ஆட்சி முறையிலே தான் தங்கி இருக்கின்றது .
  


No comments:

Post a Comment