Thursday, October 17, 2013

சிந்தனை வீழ்ச்சியில் உதித்த ஆபத்தான ஆலிம்கள் ! ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி ' எனும் முஸ்லீம்களின் நினைவுகளில் இருந்து ....(PART 07)

     வரலாறு தனது பதிவில் சில மனிதர்களை பற்றி காணாமல் சென்றுவிடும் அவர்கள் செய்த சில செயல்களை அறியக்கிடைக்கும் போது அதிர்ச்சியோடு சேர்ந்த ஆச்சரியம் எமக்கு ஏற்படுவதுண்டு . இலங்கையின் வடபுல யாழ்ப்பாண முஸ்லீம்களின் வரலாற்றிலும் இத்தகு மனிதர்கள் நிறையவே இருக்கின்றார்கள் .அதில் பலர் அல்லாஹ்வை சந்திக்க சென்று விட்டார்கள் . இன்னும் சிலர் அறியப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .


           1990 அக்டோபர் நாட்களில் விடுதலைப் புலிகளால் பலாத்கார இனத்துடைப்பாக முஸ்லீம்கள் விரட்டப் பட்டதற்கு முன்னர் ,இனவாத யுத்தத்தில் முஸ்லீம் உம்மத் ஒரு கொடூரத்தையும் ,அசிங்கத்தையும் கண்டது .ஆயுதக் கவர்ச்சியிலும் , சூழ்நிலை வாதத்திலும் கட்டுண்டு அதன் பக்கம் இழுபட்டுச் செல்லும் முஸ்லீம் இளைஞ்சர்கள் தொடர்பில் கவலை கொண்டது .

             முஸ்லீம் உம்மத்தின் சமூக செல்வாக்கு மிக்க நபர்கள் இந்த விடயம் பற்றி தமக்கு தெரிந்த வகையில் ஆழமாக அன்று  சிந்தித்தார்கள். அந்த வகையில் அமைப்பு ரீதியான ஒரு கட்டமைப்பு வடிவத்தை கொடுப்பது தவிர வேறு வழி அவர்களுக்கு தெரியவில்லை .அஹிம்சையை 'வெபனுக்கு' சிங்கர் ஆயில் போட்டு' ரீபிரஷ்' பண்ணவே பாவிக்கும் போராட்டமாகவே கருதும் விடுதலைப் புலிகள் போன்ற கொடூரிகளுக்கு மத்தியில் இந்த முடிவைத் தவிர வேறு வழி தெரியவில்லை .

            முஸ்லீம்களின் தனித்துவம் , அடையாளப்படுத்தல் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவே இந்த 'இளைஞ்சர் அமைப்பாகும் ' தவிர ஈழப் போராட்டத்தின் பெயரில் கொலைகாரக் கொள்ளையர்களாக வலம்வரும் ஆயுத தாரிகளுக்கு எதிராகவோ , அல்லது இனத் துவேசத்தின் தெளிவான வடிவமாக வலம்வரும் சிங்கள அரச பயங்கர வாதத்துக்கு எதிராகவோ முஸ்லீம்கள் இத்தகு அமைப்பை ஏற்படுத்தவில்லை .

            ஏதோ ஒரு வகையில் இந்த இளைஞ்சர் அமைப்பில் கட்டுண்டு போக இருந்த இளைஞ்சர்களை காட்டிக் கொடுக்கவும் இஸ்லாத்தின் பெயரோடு கோடரிக் காம்புகள் முளைத்தன , சந்தர்ப்ப சம்பவங்கள் சிலதும் நடந்தன ,சமூகம் சகோதரத்துவத்தை விலைபேசி சாத்தானிய அதிகாரத்தை தம்மீது திணித்துக் கொள்ள தயாரானது , தப்லீக் ஜமாஅத் ,ஜமாஅதேஇஸ்லாமி மோதல் என்ற அசிங்கமான 'பிரேம் வேக்' விடுதலைப் புலிகளை நரி முகத்தோடு முஸ்லீம் உம்மத்துக்கு தீர்ப்பு சொல்ல இழுத்து வந்தது .

          சமூகப் பற்று மிக்க ஒரு சிறந்த மனிதரான ஜெலீல் மாஸ்டர் மற்றும் , 'வெள்ளை'என்று அழைக்கப்படும் இளைஞ்சனை சுட்டுக் கொன்றதோடு விடுதலைப் புலிகளின் official நடவடிக்கைகள் யாழ் முஸ்லீம் உம்மத்தினுள் பிரவேசிக்கின்றது .'ஹாக்கீமியத்தை பேசி இகாமதுத் தீனை தனது முடிவாக கூறியவர் புலிகள் எனும் ஒரு கொடிய 'தாகூத்தை ' காக்கா' பிடித்து தனது ஆதிக்க வெறிக்கு 'டிபென்ஸ் லைன் ' போட்டது இங்கு குறிப்பிட்டு கூறத்தக்கது .

           இறுதியாக யாழ் முஸ்லீம்கள் விரட்டப் படுவதற்கு முன்னர் சமூக செல்வாக்கு மிக்க மனிதர்களை ,இளைஞ்சர்களை விடுதலைப் புலிகள் தமது கைதிகளாக்கி ,சமூகத்தை ஒரு தெளிவான வழிகாட்டல் பெறக்கூடிய நிலையை இல்லாமல் செய்தபின்னே விரட்டி அடித்தனர் . சூழ்நிலைக்காக புலித் தாகூத்தை 'காக்கா' பிடித்தவரும் இங்கு  கைதியாகிறார் !

              இவர் பேசிய 'ஹாக்கிமீயதும் இகாமதுத் தீனும் இன்று வரை பிறவிக் குருடன் கொடுத்த கொக்கு பற்றிய விளக்கம்  போல இருக்கின்றது .'சிந்தனை வீழ்ச்சி வடித்தெடுத்த அகௌரவத்தின் வடிவங்கள் தம்மை 'தாயிகளாக' தம்பட்டம் அடிப்பது யாழ்ப்பாணத்துக்கு மட்டுமல்ல ,முழு முஸ்லீம் உம்மத்துக்கும் அவமானம் மட்டுமல்ல ஆபத்தானதுமாகும் .

                                                                       (இன்ஷா அல்லாஹ் இன்னும் வளரும் ..)
                                                                                   

No comments:

Post a Comment