Sunday, September 7, 2014

இதுதான் திமிங்கிலம் போட்டு இறால் பிடிக்கும் சிஸ்டம் !!!


    சுரண்டலும் சுயநலமும் மிக்க முதலாளித்துவ ஆதிக்க
விதியில் அடிப்படை நியதி மனித குலத்தை அதன் சித்தாந்த
விழுமியங்களோடு சமரசப்படுத்துவதாகும். தனிநபர்
சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் போன்ற போலி வடிவங்களின்
பெயரில் முரண்பாட்டு அரசியலுக்கான ஒரு காட்சிப்படுத்தலை
அது காட்டி நின்றாலும் ,அது அதிகாரத்தை பேணுவதற்கான
பெயரளவு விடயங்களே ஆகும்.
     முன்பு 'வஸ்கொடகாமா' சொன்னான் "நாங்கள் ஒருகையில்
'விவிலிய பைபிளையும்' மறுகையில் வாளுடனும் தான்
இங்கு வந்துள்ளோம்" எனக்கூறி ஆயுத முனையில் கிறிஸ்தவ
மதத்தை திணித்தான் .அதேபோல இன்று முதலாளித்துவம்
ஒரு கையில் திமோகிரசி உடனும் மறுகையில் ஆட்டோ மடிக்
ரைபிள் உடனும் ஒவ்வொரு மனிதன் முன்னும் நிற்கிறது !!
இங்கு விடயம் என்னவென்றால் அந்த ரைபிளை டிமோகிறசிக்குள்
மறைத்து வைத்துள்ளது . 
                                                    அதன் மூலோபாயம் எதிர் தரப்பின்
சிந்தனை பரவலையும் ,செயலூக்கதையும் மனித சமூகத்துக்கு
தவறாக சித்தரிப்பதே .அதன்படி மாற்றப்படும் மனிதக்கருதியலை
காரணமாக்கி அதன் அழிப்பு அரசியலை ஆரம்பிக்கும் .
இன்று உலகெங்கும் நடப்பது இதுதான் .முஸ்லீம் உம்மத்துக்கு
நடப்பதும் இதுதான் .இந்த அபாயமான பொறியை புரியாமல்
முஸ்லீம் உம்மத் தனது வளங்களையும் ,உயிர்களையும்
இழந்து கொண்டு இருக்கிறது .இஸ்லாமிய பயங்கரவாதம்
இஸ்லாமிய தீவிரவாதம் !! என்ற கருத்தியலை மேற்கின்
மீடியாக்களை வைத்து பரப்பியதன் அரசியல் காரணமும்
இதுதான் . 
    இவர்கள் இறாலை சுறா போல காட்டி திமிங்கிலத்தை போட்டு
அதை ஏப்பம் விடுவார்கள் .மனித குலத்துக்கும் அது சர்வாதி
காரமாக தெரியாது .மாறாக 'ஜென்டில் மென்களின் 'மனிதா
பிமானமாக புலப்படும் .தேசங்கள் என்ற பெயரில் எமக்கு
கிடைத்த சுதந்திரம் போல .நாமும் வாழ்க ஜனநாயகம்
என உரக்க கோசம் போடுவோம் . எம்மை முடக்கிய ஒரு
கொடிய வைரஸ் கிருமியை வாழ்த்தியவர்கள் நாமாகத்தான்
இருப்போம் !!!!

No comments:

Post a Comment