Sunday, September 7, 2014

இது சத்திய எழுச்சிக்கு ஆப்படிக்கும் குப்பாரின் மொழி !!!



'ஜாஹிலீய' சத்துருக்களின் அநாகரீக சதுரங்கத்தில் 
அலட்சியமான வெட்டுக்காயா நான் !
இன்று என் வீட்டு முற்றத்தில் என்னை வைத்தே 
'கபுறு' தோண்டி ஆரத்தழுவி முதுகில் குத்த 
' தாகூதிய' மேலாதிக்க அரசியல் கூட்டாய்
களத்திலே நிற்கிறதே !!!

ஆழமான காயம் கச்சிதமான கழுத்தறுப்புகள் காட்டி !
'ஷாமை' இருட்டாக்கி விட்டு ஈராக்கில் ஒளி காட்டி
ஒழிக்கப் பார்க்கும் துரோக தரிசனங்கள்
எமக்கு புரியாமல் இல்லை !!!
முள்ளை முள்ளாள் எடுக்கும் உன் சூதாட்ட அரசியலில்
இப்போது எம் தூய இலக்கான 'கிலாபா ' !!!
துரும்புச் சீட்டாய் போக எண்ணை வயல்களை
எட்டாய் பிரிக்க பார்க்கிறதோ ஏகாதிபத்தியங்கள் !!!?

இம்முறையும் 'கிலஷ் நிகோ' சுமந்த
கிறுக்குத் தனங்களுக்குள் சகோதர இரத்தத்தை
'தக்பீரோடு' சுவைத்த பழைய பாடப் புத்தகங்களுக்கு
'கலீபா' படத்தோடு புதிய அட்டைதான் போடப்பட்டுள்ளது !!!
இங்கு இருக்கும் ஆனால் இருக்காது !!
நடக்கும் ஆனால் நடக்காது !!
இங்கு 'நோ சிஸ்டம் , நோ பெர்மனன்ட் ,பட் ஷரீயா' !!!
என்ற தூண்டிலை அடின்தொண்டை வரை
இந்த உம்மத்து விழுங்க வேண்டும்.!!!

இந்த அல்லாட்டத்தில் 'கபிடலிசம் '
ஆரவாரித்து சபாஷ் போடும் !!!
எம்மை 'கிலாடியேடர்களாய்' குஸ்தி போடவைத்து விட்டு
'பிரடியேடர்கள்' சுற்றி நின்று ரசிப்பார்களாம் !!!
புதிய திட்டம் தயார் !!!
'பெப்சி' டின்னோடு நம் 'கிங்' களும் பார்க்கத் தயார் !!!
இது சத்திய எழுச்சிக்கு ஆப்படிக்கும் குப்பாரின் மொழி !!!
இனியும் இதை விதி ஆக்குவதா 'உம்மாவே ' உனது வழி!!!
இருந்தும் அல்லாஹ் எம்மோடு தான் இருக்கிறான்.

"அவன் எத்தகையவன் என்றால் தன்னுடைய தூதரை நேர் வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான் ; சகல மார்க்கங்களையும் விட அதனை மேலோங்கச் செய்வதற்காக ; இன்னும் இதற்கு சாட்சியாக இருக்க அல்லாஹ் போதுமானவன் " (TMQ அல் பத்ஹ் : வசனம் 28)

No comments:

Post a Comment