Thursday, September 11, 2014

தெற்காசியாவில் 'அல்கைதாவாம்' !ஏன் இந்த பீடிகை அரசியல் !?

      இஸ்லாமிய அடிப்படை வாதம் ,இஸ்லாமிய தீவிரவாதம் ,இஸ்லாமிய பயங்கர வாதம் ! இத்தகு வார்த்தைகள் முதலாளித்துவ ஏகாதிபத்திய மீடியா ஆர்மியின் உயிர் கொல்லி ஆயுதங்கள் .முதலாளித்துவ அகீதாவை தக்க வைப்பதற்கான , நிகழ்கால யுத்தத்தில் இஸ்லாமிய அகீதாவுக்கு எதிரான சமூகக் கருத்தை தமக்கு சாதகமாக்க இதை அளவு கணக்கு இன்றி பாவிக்கிறார்கள்.

 முதலாளித்துவ சுரண்டல் அதிகாரத்துக்கு முட்டுக்கொடுக்க முஸ்லீம்களின் உடமைகளையும் ,உயிர்களையும் ,உணர்வுகளையும் இந்த ஆயுத பிரயோகம் மூலமே நேற்றும் கொள்ளை அடித்தார்கள் !இன்றும் கொள்ளையடிக்கிறார்கள் !இந்த மாபியா அரசியலை இலங்கை இந்திய  பொலிடிசியன் கூட்டமும் இப்போது ஒப்பீசியல் ஆக ஓபன் பண்ண இந்த அல்காயிதா ரிப்பன் வெட்டப்பட்டுள்ளது !!!

 துலுக்கன் ,தம்பிலா என்ற பாரம்பரிய துவேச கத்திகளை இந்த காயிதா எனும் நவீன சானை இயந்திரம் ஒருபக்கம் நன்றாகவே கூராக்க ,மறுபக்கம் ஜனநாயக வேஷம் கட்டிய முதலாளித்துவ தலைவர்கள் குப்ரியத்துக்கு வழிபாடு செய்ய கேட்டு முஸ்லீமின் படியேறி பச்சோந்திகளாய் வருவார்கள் !இந்த அந்தர் பல்டி அரசியலில் இதெல்லாம் சர்வ சாதாரணம் .

   இந்த கயவர்களின் கபடி ஆட்டத்தை புரியாமல் ஏதோ வாழ்ந்து போக வாக்குப்போட்டு வாழ்க சொல்வோம்  முஸ்லீம்களாகிய நாம்  !!!அப்போது குஜராத்தை மறந்திருப்போம் !எங்களுக்கு அளுத்கம அட்ரஸ் மறந்திருக்கும் !காஸ்மீர் காணாமலே போய்விடும் !தம்புள்ள கிரவுண்டில் கிரிக்கட்டை ரசிக்க தயாராய் இருப்போம் !

   கொம்ரமைஸ் மட்டுமே பிரக்டிகள் மற்ற எல்லாம் சுத்த வேஸ்ட் எனும் அடிமாட்டு முதலாளித்துவ அரசியலை சர்க்கார் சாஹிபுகள் மொழிய !அதற்கு பதுவாக்களால் முட்டுக்கொடுப்பார்கள் முல்லாக்கள் !பன்றி தின்னும் ஊரில் அதன் ஈரலை தின்றாலே பிழைக்க முடியும் என நஜீசை நாக்கூசாமல் வேதமாக ஓதுவார்கள்!!!

   நீ இந்த அயோக்கிய அரசியலில் வாழமுடியும் !ஒரு இந்துஸ்லிமாக, புத்துஸ்லிமாக மாறினால் மட்டுமே !புரியவில்லையா !?அவர்கள் கேட்பது இறைவனின் அதிகாரத்தை அவர்கள் கூறும் எல்லைக்குள் மட்டுப்படுத்தி விடு !!!வாழ்வியலை சனநாயக சாத்தானிடம் ஒப்படைத்து விடு என்பதே !!! போத்தல் மாற்றப்பட்டாலும் இந்த பழைய வைனையே பருகச் சொல்வார்கள் பாவிகள் !!!

தப்பிக்க ஹுப்புத் துன்யா வண்டி ஏறி குப்ர் சிஸ்டத்தில் நுழைந்தால்  முடியும் !!!இது ஒரு வழி .அல்லது இஸ்லாமிக் சிஸ்டத்தை ஏற்படுத்த தெளிவோடும் துணிவோடும் சுன்னாவின் வழி போராடு .வேறு வழி இல்லை இன்றே முடிவெடு !!!



No comments:

Post a Comment