Wednesday, January 29, 2014

தாகூத்தோடு 'கொம்ப்ரமைஸ் ' போடத் துடிக்கும் இஸ்லாமிய தாயி !!! (ஒரு பேஸ் புக் சூட்டில் இருந்து ...)


( இந்திய குப்ரிய ஜாஹிலீய அரசில் இட ஒதுக்கீடு வேண்டி போராடும் P .J  1980 களில் அவர் பேசிய சியாசா தொடர்பான விளக்கத்தை மறந்து போயுள்ளார் !? ஹாகீமியத்தை அடகு வைத்து ஏகத்துவம் பேசும் இந்த தாயியின் பின்னால் அடுத்தவர்களை கபுறு முட்டிகள் என்றும் , சியாக்கள் என்றும் கூறும் ஒரு தவறான கூட்டமும் பின் தொடர்கிறது , தாகூத்திய சலுகையின்  கீழ் சமரசம் தான் இவர்கள் காட்டும் இகாமதுத் தீனா !!? அப்படியானால் இவர்களை எப்படி அழைப்பது !? பாவம் என்னதான் ஜாஹில் முட்டிகளாக இருந்தாலும் நம்ம சகோதரர்கள் .)

சென்னைப் போராட்டத்தில் பீ.ஜே.யின் உரையின் சாரம்:

தேர்தல் விதிகளுக்கு முன்பே இடஒதுக்கீடு அதிகரிப்பு குறித்த அறிவிப்பை அ.தி.மு.க. முதல்வர் வெளியிட வேண்டும். 

அப்படி வெளியிட்டால் நோட்டும் சீட்டும் கேட்காமல் ஆதரவு அளிப்பதுடன் முஸ்லிம் வாக்குகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் வேலையையும் செய்வோம். 

அறிவிப்பு வெளியிடாவிட்டால் அ.தி.மு.க.வுக்கு எதிரான "கடுமையான நிலைப்பாடு" எடுப்போம்! 

பிப்.23 ஆம்தேதி வரைதான் உங்களுக்கு கெடு! 

நாங்கள் நன்றியுள்ள சமுதாயம் என்பதை மறக்க வேண்டாம்....!

................................................................................................................................

இது இஸ்லாத்தின் போராட்டத்தில் இருந்து ....!!!

சரணடைந்து விடு உயிர்வாழும் சுதந்திரம் அளிக்கப்படுவாய்...!

தனது பூமியில் தறிகெட்டுத் திரிந்த மனித மனங்களை தனது வேதத்தின் மூலம் ஒருங்கிணைத்து தனது அதிகாரத்தின் கீழ் பிணைக்க அல்லாஹ் தனது இறுதித் தூதரை 1400 ஆண்டுகளுக்கு முன்னாள் அனுப்பினான். 

இம்மாபெரும் பொருப்பைச் சுமந்து கொண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 13 ஆண்டுகளில் அரசையும் அல்லாஹ்வின் 'இறையாண்மையையும்' நிறுவி அடுத்த 8 ஆண்டுகளில் தீபகற்பத்தை அதற்குள் உள்ளடக்கி, 7000 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்ட ரோமப் பேரரசின் 'இறையாண்மையையும்' 5000 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்ட பாரசீகப் பேரரசின் 'இறையாண்மையையும்' வாள்முனையில் இப்படி நிறுத்தினார்கள்:-

" بسم الله الرحمن الرحيم , من محمد رسول الله، إلى كسرى عظيم فارس، سلام على من اتبع الهدى، وآمن بالله ورسوله، وشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدًا عبده ورسوله، أدعوك بدعوة الإسلام، فإني رسول الله إلى الناس كافة لينقذ من كان حيا ويحق القول على الكافرين، أسلم تسلم، فإن أبيت فعليك إثم المجوس.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்... 
(இது) அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து பாரசீகப் 'பேரரசர்' கிஸ்ராவுக்கு (அனுப்பப்படும் எச்சரிக்கை கடிதம்) 
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும் அவனுக்கு நிகர் ஏதும் இல்லையென்றும் முஹம்மது அவனது தூதராகவும் அடியாராகவும் இருக்கிறார் என்றும் சாட்சியமளிப்போருக்கும் நேர்வழியைப் பின் தொடருவோருக்கும் சலாம் (உண்டாகட்டும்.) 

இஸ்லாத்தின் அழைப்பின் மூலம் உனக்கு அழைப்பு விடுக்கிறேன். (இஸ்லாத்தை ஏற்று ) உயிர்ப்புடன் உள்ளோர் மற்றும் (அதை) நிராகரிப்போர் மீது (அவர்கள் தொடர்பான கட்டளைகள் அடங்கிய அல்லாஹ்வின்) சொல்லை உண்மைப்படுத்தவும் அமல்படுத்தவும் முழுமனித குலத்துக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் நான். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்; ஈடேற்றம் பெறுவாய்..! அதற்கு நீ மறுத்தால் 'மஜூஸி'களின் பாவம் உன்னைச் சேரும்...!

இதை வேறுவிதமாகவும் மொழி பெயர்க்கலாம். அதுவே சரியானது என்று நினைக்கிறேன். இதோ இப்படி:-

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்... 
(இது) அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து பாரசீகப் 'பேரரசர்' கிஸ்ராவுக்கு (அனுப்பப்படும் எச்சரிக்கை கடிதம்) 
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும் அவனுக்கு நிகர் ஏதும் இல்லையென்றும் முஹம்மது அவனது தூதராகவும் அடியாராகவும் இருக்கிறார் என்றும் சாட்சியமளிப்போருக்கும் நேர்வழியைப் பின் தொடருவோருக்கும்தான்

"*சுதந்திரம்"*...! 

இஸ்லாத்தின் அழைப்பின் மூலம் உனக்கு அழைப்பு விடுக்கிறேன். (இஸ்லாத்தை ஏற்று ) உயிர்ப்புடன் உள்ளோர் மற்றும் (அதை) நிராகரிப்போர் மீது (அவர்கள் தொடர்பான கட்டளைகள் அடங்கிய அல்லாஹ்வின்) சொல்லை உண்மைப்படுத்தவும் அமல்படுத்தவும் முழுமனித குலத்துக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் நான். 

"* சரணடைந்து விடு; சுதந்திரம் அளிக்கப்படுவாய்"* 

நீ மறுத்தால் மஜூஸிகள் (புரியும் சட்ட விரோதக்) குற்றங்கள் உன்மீது சுமத்தப்பட்டு (தண்டிக்கப்படு) வாய்.

5000 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்ட பாரசீக வல்லரசை எத்தனை 'கம்பீரத்தோடு' அணுகி நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள் என்று பாருங்கள்!

அதன் பின்னர் அவரின் தோழர்கள் அதே பாரசீக வல்லரசை இப்படி அணுகினார்கள்:-

أرسل سعد بن أبي وقاص إلى يزدجر ملك الفرس برسالة بأمر من عمر فقالوا له : "أيُّها الملك؛ إنَّ الله رحمنا، فأرسل إلينا رسولاً يدلنا على الخير، ويأمرنا به.. ثم أمرنا أن نبدأ بمن يلينا من الأمم فندعوهم إلى الإنصاف، ونحن ندعوكم إلى ديننا، فإن أبيتم؛ فالجزية، فإن أبتم، فالقتال بيننا وبينكم

பாரசீக அரசன் 'யஸ்தஜிருக்கு' உமர் (ரழி) அவர்களின் கட்டளைக்கிணங்க ஸஃது பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் ஒரு கடிதம் அனுப்பினார்கள்; அதில் அவர்கள் 'யஸ்தஜிருக்கு' இப்படிச் சொல்லி இருந்தார்கள்:-

அரசே! அல்லாஹ் எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பி நல்லதை அறிவித்து நல்லதை ஏவி 'ரஹ்மத்' புரிந்தான். பின்னர் எங்களை அடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயங்களுக்கு (அதை முன்னெடுத்துச் செல்லத்) தொடங்குமாறு கட்டளையிட்டான். ஆகையால் நாம் அவர்களை'' நியாயத்தின்''பக்கம் அழைக்கிறோம். உங்களையும் எமது 'தீனின்' பக்கம் அழைக்கிறோம். நீங்கள் வர மறுத்தால் ஜிஸ்யா - கப்பம்; அதற்கும் மறுத்தால் உமக்கும் எமக்கும் இடையில் யுத்தம்தான்...!

சுப்ஹானல்லாஹ்.... எத்தனை கம்பீரம்...?

இன்று நாம் கேட்கிறோம்.... 

எங்கள் கிலாஃபத் அரசை ஒழித்துக் கட்டி, அந்த அரசு மீண்டும் எப்போதுமே துளிர்த்து விடாத அளவுக்கு

'உலக முதலாளித்துவச் சித்தாந்தத்தின் அடிப்படையிலான' அமெரிக்க ஒற்றைத் துருவ உலக ஒழுங்கில் அடிமைச் சேவகம் புரியும் மத்திய மா நில அரசுகளே! 

உனக்கு "கீழ் வேலை" செய்ய எனக்கு வாய்ப்பு கொடு...!

உங்கள் நெஞ்சம் வெடிக்கவில்லையா...?

இந்த முழக்கத்தைக் கேட்டு....!

No comments:

Post a Comment