Friday, January 3, 2014

கொள்கை வாதமாக்கப்பட்டுள்ள கொலை வதங்களுக்கு மத்தியில் முஸ்லீம் உம்மாஹ் !!


 நம்பிக்கையீன மாக்கப் பட்ட ஒரு நம்பிக்கையில் நிராகரிப்போடு சமத்துவம் சகவாழ்வு ஒன்றிய குடித்தனம்  சரிகாணப் படுகிறது !? அதனால் ஏட்டுச் சுரைக்காய் வடிவில் எம்  தூய இலட்சிய வாழ்வு ஆக்கப்பட்டிருக்கிறது .  இயக்க வாதம் எனும் வெறிபிடித்த பார்வையால் எமக்கு நாமே வசைபாடும் கலாச்சாரம் கொடிகட்டிப் பறக்கிறது .பத்துவா எனும் பெயரில் விடப்படும் வார்த்தை அம்புகள் கபுரை தோண்டியும் பழி தீர்க்கும் !! இப்படி சகோதர மாமிசத்தை சத்தியத்தின் பெயரில் உண்ணும் காட்டேரிகளா நாம் சகோதரா !!? 




    இயக்கம்  தலைக்கேறிய பிடிவாதங்களில் சகோதரத்துவம் இங்கு தினம் தினம் வெருண்டோடிப்  போகும்!!இங்கு பிரிவினைக்கான உசூல் தேடும் வரண்ட தத்துவத்தின் கீழ் திரண்ட போராட்டத்தில் நாட்டாமை குப்பாரா!?அசத்திய தீர்ப்பிட்கு இஸ்லாத்தை ஈடுவைக்கும்  இழிவான நடத்தைதான் ஏகத்துவ வாதமா !? புரியவில்லை !கேட்டால் உலகமும் மார்க்கமும்  தெரியாதாம் !!! முஸ்லீம் வீட்டு 'பித்னாவில்' அபூஜஹல் நீதிபதி !!! இது ஒரு பக்கம் .


        களங்கள் மாறிய காட்சிகளில் 'தாகூத்' தந்த தந்திரமான கழுத்தருப்புகள் ஆழமான காயங்கள் ஆரும் முன்பே ,இன்னொருவன் பெரும்பான்மையின் பெயரில் பெற்றோல் ஊற்றத் தொடங்க , பற்ற வைக்க நம்மவனே தீப்பெட்டி கொடுக்கும் ஒற்றுமை அற்ற தனமே இங்கு ஆபத்தானது . ஏம்மை எரித்து குளிர் காய காத்திருக்கும் கொடியவனோடு உறவாடி முஸ்லிமை வசைபாடி அல்ஹம்து லில்லாஹ் சொல்லும் தவறு திருத்தப் பட வேண்டும் .


                    முஸ்லிம் சமூகத்தை ஒன்று படுத்தி அதன் சகோதர பலத்தை சொல்லி நிற்கும் மஸ்ஜித் பன்மையாகியுள்ளது . பள்ளி கட்டி பிரிவது ஒரு பெசனாக மாறி  சந்திக்கு ஒரு கூட்டம் சேர்த்துள்ளது .மிம்பரில் ஏறும்  அறிஞர்கள்  அகோரிகளாக மாறி இந்த கொலை வெறியை கொள்கையாக வேறு விளக்கம் கொடுக்கிறார்கள் .சிந்தனை வீழ்ச்சியின் காரணமாக சிதைந்து நொந்து போன முஸ்லீம் உம்மத் இன்னும் சிதறடிக்கப்பட அடுக்கப் படுகிறது ஆதாரங்கள் !! இதுதான் அன்னார்ந்து பார்த்து துப்பிக் கொள்ளும் துப்புக் கெட்ட வழிமுறை !! இது இஸ்லாம் என்ற பெயரில் உலாவரும் ஜாஹிலீயத் . 


           
         


No comments:

Post a Comment