கெரில்லா போரியல்யுக்திகளை தாண்டிய மரபுப் போரியலை உதாரணப்படுத்தும் களமாகவே இன்று சிரியா அமைந்துள்ளது . ஆணவமான ஒரு அரச பயங்கர வாதத்தை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் இஸ்லாம் தங்களை ஆளவேண்டும் என்ற மக்களின் நியாயமான எதிர்பார்ப்பை தடுத்தல் ,அழித்தல் , தவிடு பொடியாக்கள், என்ற தெளிவான முடிவோடு தாகூதிய அதிகாரம் இங்கு களமிறங்கியது .
ஒரு சிறந்த கெரில்லா அணியின் ஆற்றல் மரபு முறை இராணுவத்தை பொறிமுறையான தாக்குதல் உத்திகள் மூலம் நிலைகுலையச் செய்வதோடு ,அதன் மனோவலிமையை சிறிது சிறிதாக குறைப்பதன் ஊடான உளவியல் தாக்கத்தின் மூலம் ,போரியல் ஆற்றலை சிதைத்து கால ஓட்டத்தில் சடுதியான ஒரு கூட்டுத் தாக்குதல் மூலம் எதிரியை பின் வாங்கச் செய்வதே . ஆனால் சிரியாவில் அப்படியான களமாடல் வடிவம் (ஆங்காங்கு நடந்த சில தாக்குதல் நடவடிக்கைகள் தவிர )
பெரிதாக இருக்கவில்லை .
இங்கு இன்னொரு கேள்விக்கும் நாம் விடைதேட வேண்டும் அது சிரிய மக்கள் அவசரமாக இராணுவ தாரிகளாக பரினமித்ததன் மர்மம் என்ன ? என்பதே அந்த வினாவாகும் .உண்மை என்னவென்றால் அங்கு பாடசாலைக் கல்வி முடிந்தவுடன் இரண்டு வருடங்கள் இராணுவத்தில் கட்டாய சேவை என்பதை அது சட்டமாக கொண்டியங்கிய நாடாகும் என்பதே ஆகும் .
இங்கு புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் மேற்குலகு போடநினைக்கும் அரசியல் , இராணுவ கடிவாளங்களை புறந்தள்ளிய ஒரு புரட்சியே அங்கு பரிணமித்துள்ளது . மேலும் மக்கள் தரப்பில் இருந்து களமாடும் 'ஜெனரல்களின் ' வார்த்தைகளில் பண்படுத்தப்பட்ட இஸ்லாமிய சிந்தனா வாதத்தின் தெளிவான கருத்துக்களை காண முடிகின்றது .
அந்த நுணுக்கமான பன் படுத்தல்கள் இஸ்லாம் தொடர்பான சிரிய மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மிகச் சரியாக பயன்பட்டுள்ளது .
1. வளம் மிக்க நிலம் .
2. இஸ்லாத்தை நேசிக்கும் மக்கள் + தலைமைகள் .
3. எதையும் எதிர்கொள்ள தயாரான இராணுவம் .
இன்ஷா அல்லாஹ் எதிர்காலம் இனி இஸ்லாத்திற்கே என்பதற்கு மிகச் சிறந்த ஆதாரமாகும் . அல்லாஹு அக்பர்.
labbaik
ReplyDelete