Saturday, January 19, 2013

இது ஒரு பகிரங்கக் கொலைகாரன் பற்றிய அறிமுகம் .



மரணமே இவனைக் கண்டு அஞ்சும் .
கர்ப்பிணிகள் இவனது நாமத்தை கூறினால் .
கருச்சிதைவு 100% நிச்சயம் !
துப்பாக்கிகள் கூட இவன் கையில் சிக்காமல் 
தூக்கில் தொங்கவும் தயாராம் !
மனித வரலாறு இவனது பதிவிற்கு 
பக்கங்கள் வைக்கவில்லை காரணம் 
கொடிய மிருகத்தை அதில் சேர்ப்பதில்லையாம் !
சொல்லகராதியில் கொலை என்ற வார்த்தை 
தன்னை புரிய வைக்க இவனை 
சந்திக்கச் சொல்கிறதாம் !

No comments:

Post a Comment