Saturday, January 12, 2013

சிரியாவின் இரண்டாவது அதிமுக்கிய இராணுவ விமானத் தளமான' TAFTANAZ' இஸ்லாமிய போராளிகள் வசம் .


    

                                        தொடர்ச்சியான ஒருமாத முற்றுகைச் சமரின் பின்னர் 'இட்லிப் ' நகரின் வடபுறம் அமைந்திருந்த இரண்டாவது அதிமுக்கிய சிரிய விமானப்படை விமானத்தளம் இஸ்லாமிய போராளிகள் வசம் (நேற்றைய தினம் அதாவது 11/ 01/2013 இல் ) வீழ்ந்ததாக சிரியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .இந்த இழப்பானது சிரியாவின் 'தாகூதிய ' அரசுக்கு மிகப்பெரிய ஒரு தோல்வி நிலையாகும் .


                                                      சிரியாவின் கேந்திர முக்கியத்துவம் மிக்க பல இடங்களை அரச படை தொடர்ச்சியாக இழந்து வந்ததன் வரிசையில் இந்த ' TAFTANAZ' விமானத் தளமும் மிக முக்கியமானதாகும் . மரபு ரீதியான இராணுவப் படையணிகளாக இஸ்லாமிய போராளிகள் முன்னேறி வருவது ,சிரியாவின் தாகூதிய அரசு தரப்புக்கு மட்டுமல்லாமல் குப்ரிய ஆதிக்க உலகையே இப்போது 
அதிர்ச்சி அடையச் செய்துள்ளது .


                                                         மேலும் ' TAFTANAZ' விமானத் தளம் உட்பட பல கேந்திர நிலைகளை கைப்பற்றிய 'JABATH AL NUSRAH' அமைப்பு தொடர்பாகவே குறிப்பாக அமெரிக்க தரப்பு பயங்கர வாத முத்திரை குத்தியது .சிரியாவின் இராணுவ போரியல் வல்லமையின் குறிப்பிடத்தக்க பலத்தை இந்த அமைப்பு கொண்டுள்ளதென்பது இங்கு குறிப்பிடத் தக்கது . இவர்களையே 'கிலாபா பிரிகேட் ' எனும் சுட்டுப் பெயரால் மேற்கின் மீடியாக்கள் குறிகாட்டி(தமது நடுக்கத்தை வெளிக்காட்டி ) வருகிறார்கள் .

                                                      இந்த அமைப்பினரை பொருத்தவரை சிரியாவின் பல இராணுவ இரகசியங்களை அறிந்தவர்கள் , சிரிய இராணுவத்தின் பலம் ,பலவீனம் பற்றி நன்கு தெரிந்தவர்கள் . அதனால் அமெரிக்க மற்றும் ரஷ்ய தரப்புக்கு இப்போதுள்ள கவலை இரசாயன ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர சுடு சக்தி கொண்ட ஏவுகணைகள் இந்த  'JABATH AL NUSRAH' அமைப்பின் வசமாகி விடக்கூடாது என்பதே ஆகும் . 


No comments:

Post a Comment