Friday, January 25, 2013

'வை திஸ்' கொலை வெறி !?



      இது 'வைட் ஸ்கின் ' சியோனிஸ்ட் ' காவிப் போர்வையில் காட்ட நினைக்கும் காட்டு மிராண்டித் தனம் . 'அசோகனின்' வாளை 'இராம ஜென்ம பூமியின்' பக்தர்களின் வழிகாட்டுதலில் ஏந்தி நிற்கும் 'தீசனின் ' தீவிர வாதக் கதை !!! இவர்களது அஹிம்சையின் முன் முஸ்லீம்களுக்கு மட்டும் 'ஹிம்சை ' என்பதுதான் நடப்பு விதி !!! இந்த முதலாளித்துவ முதலைகள் முடுக்கி விட்டிருப்பது தமது ஆதிக்கக் கதிரைகளை கட்டிக் காக்க என ஆள் சேர்க்கும் அநீதமான அரசியல் .


                       ஜனநாயக அரசியல்  பெரும்பான்மையுடன் தான்   பக்கச் சார்பாக மாறும் . அதில்  கொத்தடிமையாகி இந்த சிறுபான்மை வாழ்க்கை நிச்சயிக்கப்படுமென்றால் !!? நீதி என்று அதில் ஒன்றுமில்லையே !? பொதுவாகவே சிறுபான்மையை துரத்தும்  பெரும்பான்மை அரசியலின் இந்தக்  கொலைவெறி தெற்காசியாவில் இனவாதம் ,மதவாதம் என்ற பெயரில் தொடரும் கேவலமான வழிமுறை . அந்தத் தொடரில் ஒரு  இன்றைய கதைதான் கீழே வருவது .

மதம் பிடித்த பேய்கள் 
மமதை கொண்டு ஆடுது !
மனிதக் குருதியில் குளித்திட 
தொடர் கொலையை நாடுது !

பர்மாவில் பற்றிய தீ இங்கும் 
பாலம் போடப் பார்க்குது  !
மாணிக்கத் தீவில் மீண்டும் 
இரத்த ஆற்றை கேட்குது  !

'சியோனிசக் ' கூலியில் சிலது 
சிலுவை யுத்தம் செய்யிது !
'யெஸ் சேர் ' போட்டு அதை 
காவி கட்டி தொடருது !


No comments:

Post a Comment