Saturday, January 26, 2013

'மின்னலுக்குப் பயந்து இரும்புக் கூட்டில் ஒளித்தல்' என்றால் என்ன ?



                                பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறைக்கப்பட விபச்சாரத் தொழிலை சட்ட பூர்வமாக்கி பரவலாக்குங்கள் என்ற கருத்து இன்று இந்தியாவில் சிலரால் முன்வைக்கப் படுகின்றது .அண்மையில் டெல்லியில் நடந்த கொடூரமான பாலியல் வன்முறையுடன் கூடிய படுகொலை சம்பவம் தொடர்பில் கொதித் தெழுந்த மக்கள் கூட்டத்தின் முன் மேட்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் கிடைக்கப் பெற்ற பல்வேறு ஆலோசனைகளில் இதுவும் ஒன்றாகும் .

                                             இந்தக் கருத்து மிகத் தவறானது மட்டுமல்ல பெண்கள் சமூகத்தின் மீது மட்டுமல்ல  மிகக் கொடூரமான சிந்தனா ரீதியான சமூக நோய்க்கு வித்திடுவதுமாகும் . 'மின்னலுக்கு பயந்து இரும்புக் கூண்டில் ஒழிப்பது ' போல் ஒரு செயல் தான் இதுவாகும்; என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் .

                                           மேற்கின் சிந்தனா வாதத்தின் கீழ் படுதோல்வியடைந்த ஒரு வழிமுறையே திறந்த பாலியல் கொள்கையாகும் . அதன் ஒரு அம்சமே விபச்சாரத்தை 'லைசென்ஸ்' கொடுத்து பரவலாக்கினால் பாலியல் மூர்க்கத்தனம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பாகும் . ஆனால் இது நடந்ததா ? என்ற கேள்விக்கு பதிலை கீழே வரும் புள்ளி விபரத்தை பார்த்தாலே புரிந்து விடும் .


 

                                              திறந்த பாலியல் பின்பற்றப் படும் நாடான அமெரிக்காவில் 1990 இல் இருந்து 2000 ம் ஆண்டு வரையான பத்து வருடங்களுக்குள் 2006093 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன . அதே போல 2000ம் ஆண்டில் இருந்து 2010 வரையான பத்து வருடங்களுக்குள் 2871732 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன . இவ்வளவிற்கும் தொழில் முறை விபச்சாரம் தாராளமாக கொடிகட்டிப் பறக்கும் நாடு ! மேற்கை 'காப்பி ' அடிக்கும் தவறான பாதை நல்ல விளைவை அல்ல இன்னும் பல சமூக  நோய்களையே பெற்றுத்தரும் என்பதற்கு இது சிறந்த ஆதாரம்  .


                                                                                                                              (அதே நேரம் அந்தக் கருத்துக் கணிப்பில் சவூதி அரேபியாவின் புள்ளி விபரங்கள் பின்வருமாறு இருந்தது . 1990 இல் இருந்து 2000 ம் ஆண்டு வரையான பத்து வருடங்களுக்குள் 25 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன . அதே போல 2000ம் ஆண்டில் இருந்து 2010 வரையான பத்து வருடங்களுக்குள் 22 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன . )


                                                                        திறந்த பாலியல் கொள்கையின் கீழ் விபச்சாரத்தை மேற்கு சட்டபூர்வமாக்கியதன் அடுத்த விளைவு அது நேரடியாக தாக்கிய அடுத்த விடயம் குடும்பவியல். இன்றும் அங்கு தொழில் நுட்பத்தாலும் ,அறிவியலாலும் மேம்படுத்திக் காட்டப் படும் ஒரு போலியான நாகரீகத்தையே காட்ட முடிந்தது தவிர சிதைந்து சின்னா பின்னமான குடும்பக் கட்டமைப்பே அங்கு காணப்படுவது அவர்களே ஏற்றுக்கொண்ட விடயம் . இப்படியான நிலையை ஏற்படுத்தக் கூடிய திறந்த பாலியலின் விபச்சார 'லைசென்ஸ்' எமக்கு தேவையா ? 


No comments:

Post a Comment