Sunday, January 20, 2013

'குரங்கு கையில் பூமாலை ' என்றால் என்ன ?


              1961 இல்  இந்த சம்பவம்  பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடந்தது. இந்த சம்பவத்தோடு சம்பத்தப் பட்டவர் ஒரு அமைச்சர் .சாதாரண அமைச்சர் அல்ல பிரித்தானிய பாதுகாப்புத் துறையோடு சம்பத்தப் பட்ட அமைச்சர் . அவரின் பெயர் 'JOHN  PROFUMO ' . அவரின் கேவலமான    நடத்தைக்கு    உதாரணமான      சம்பவமே கீழே வருகின்றது .இது ஒரு தனி மனித தவறு என்பதால் சுட்டிக்காட்டவில்லை ஆனால் அந்த சமூகத்தின் பிரதானிகள் , அந்த சமூகத்திற்கு சட்டம் இயற்றக் கூடியவர்கள் . இது சம்பந்தமாக என்ன தீர்ப்பைக் கூறினார்கள் என்பதை எடுத்துக் காட்டவே ஆகும் .



                                         இந்த அமைச்சருக்கும் 'கிரிஸ்டைன் கீலர் ' என்ற மொடல் அழகிக்கும் இடையில் தவறான பாலியல் தொடர்பு இருந்தது . இந்த கள்ளத் தொடர்பு வெளியே தெரிந்தது . கோபத்தோடு  
அந்த பாராளுமன்றம் சம்பவத்தை பற்றி கடுமையாக விசாரிக்கத்  தொடங்கியது . (சில நேரம் தங்களுக்கு அந்த காம சுகம்  கிடைக்க வில்லையே ! என்ற கவலையாக கூட இருக்கலாம் .) காரணம் இது தான் .

                                     அவர்கள் கோபப்பட்ட காரணம் 'கிரிஸ்டைன் கீலர் ' என்ற அந்தப் பெண் ஒரு ரஷ்ய உளவாளி .ஒரு ரஷ்ய கடற்படை அதிகாரியுடனும் அவளுக்கு 'செக்ஸ்' உறவு இருந்தது,பிரித்தானிய இராணுவ இரகசியங்களை  அவளது உடலைக் காட்டி இந்த அமைச்சரிடம் இருந்து வாங்கி , அந்த கடற்படை அதிகாரி மூலம் ரஷ்யாவிற்கு கடத்தப்பட்டதும் தெரிய வந்தது .

                          அந்த அமைச்சர் தான் தப்பிக்கொள்ள பல பொய்களை கூறினார் . ஆனால் சம்பவங்கள் யாவும் ஆதாரத்தோடு நிரூபிக்கப் பட்டது .பிரித்தானிய பாராளுமன்றம் என்றால் இன்றைய சர்வதேச ஜனநாயக  வடிவத்தின் தந்தை என்று கூட கூறலாம் . இந்த சம்பவம் தொடர்பில் கொடுத்த தீர்ப்பு என்ன ?அது இதுதான் .



                          " குறித்த சம்பவத்தில் அமைச்சர் 'JOHN  PROFUMO'கிரிஸ்டைன் கீலர் ' உடன் 'செக்ஸ்' உறவு வைத்துக் கொண்டது தவறில்லை . அது அவரது தனிப்பட்ட விடயம் . அத்தோடு அது எமது பண்பாட்டு எல்லைகளுக்கும் உட்பட்டது ! ஆனால் இராணுவ இரகசியங்கள் வெளியிடப் பட்டது தான் தவறானது !எனவே அதற்காக அவர் தண்டிக்கப் பட வேண்டும் "



  # இங்கு அந்த அமைச்சரின் தவறான 'செக்ஸ்' உறவு அவர்களின் பண்பாட்டு எல்லைகளுக்கு உட்பட்டதாம் !

 # தவறு கண்டு பிடிக்கப் பட்டும் தன்னை நிரூபிக்க அமைச்சர்  'JOHN  PROFUMO'  பொய் சொன்னது கூட தவறில்லையாம் !! 

 # உலகத்திற்கே ஒளி கொடுத்த ஐரோப்பா என சொல்லப்பட்டாலும் , பெண் தொடர்பில் தனது வரலாற்று மனப் பாங்கை மாற்றிக் கொள்ளவில்லை !!!

     இப்படி இங்கே கவனிக்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன . ஆனால் இந்த உதாரண சம்பவத்தோடு ஒத்துப் போகக் கூடிய பல சம்பவங்கள் . இன்னும் பல நாடுகளிலும் நடந்துள்ளன . எல்லா பாராளு மன்றங்களும் இத்தகு துப்புக்கெட்ட தனத்தோடுதான் இருக்கின்றன . இப்படிப் பட்டவர்கள் தான் மனிதனுக்காக சட்டம் இயற்றப் போகிறார்களாம் !!! இவர்களின் மூலம் தான் பெண்கள் மீது தொடரப்படும் வன்முறைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கப் போகிறதாம் !!! இதை  'குரங்கு கையில் பூமாலை ' என்று நாம் சுருக்கமாக  கூறலாம் .

                                                


No comments:

Post a Comment