Wednesday, January 23, 2013

(FREEDOM OF THE UTERUS) கருப்பைச் சுதந்திரம் ஒரு விபச்சார அழைப்பே .


 
                இஸ்லாத்திற்கு முற்பட்ட அரேபியாவில் நான்கு முறையான ஆண் , பெண் உடலுறவுக்கான  உறவு முறைகள் இருந்தன முதலாவது முறை இன்று இருப்பதைப் போல ஒருவன் தான் விரும்பும் பெண்ணின் தந்தையிடம் முறையாக பெண் கேட்பார் . அவரின் சம்மதத்துடன் அந்தப் பெண்ணால் நிர்ணயிக்கப் பட்ட ஒப்பந்தத் தொகையை கொடுத்து திருமணம் செய்து (தாம்பத்திய உறவில் ஈடுபட்டுக் ) கொள்வார் .


                      இரண்டாவது முறை கணவன் தன் மனைவியின் மாதவிடாய் காலம் முடிந்த பின் , ஒரு குறிப்பிட்ட உயர்ந்த குல ஆணை தன் மனைவியுடன் கூடச் செய்வான் . அவள் அதன் மூலம் கருவுறும் வரை அந்தக் கணவன் அவளை நெருங்க மாட்டான் . இங்கே இந்தக் கணவனின் நோக்கம் உயர்ந்த குலத்தில் இருந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும் .


                                        மூன்றாவது முறை பத்து அல்லது அதற்கு குறைவான ஆண்கள்  கூட்டம் , ஒரு குறிப்பிட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்ளுவார்கள் . அவள் கருவுற்று பிள்ளை பெற்றபின் அந்த ஆண்களை அழைப்பாள் .
அந்த ஆண்களில் யாரும் அந்த அழைப்பை மறுக்கக் கூடாது . அவர்களிடம் அந்தப் பெண் பின் வருமாறு கூறுவாள் .

          " நீங்கள் ,உங்கள் உறவால் விளைந்ததைக் கண்டீர்கள் . அது இந்தக் குழந்தைதான் " என்பாள் பின் அவர்களில் ஒருவனைக் காட்டி "இது உங்கள் குழந்தைதான் " என்று கூறுவாள் அதை அவன் மறுக்க முடியாது .

                                    நான்காவது முறை ஒரு பெண் தன் வீட்டுக்கு முன்னாள் ஓர் கொடியை நாட்டி வைப்பாள் .அதன் அர்த்தம் உடல் சுகம் வேண்டுபவர்கள் தாராளமாக வாருங்கள். என்ற பகிரங்க அழைப்பே ஆகும் .பலரும் வருவார்கள் 
கூடுவார்கள் ,செல்வார்கள் . அவள் கருவுற்று குழந்தை பெற்ற பின் உறவு கொண்ட ஆண்கள் எல்லோரும் அழைக்கப் படுவர் .

                பின்னர் குழந்தையின் சாயலைக் கொண்டு தந்தையை அடையாளம் காணும் திறமை உள்ளவள் என கருதப் படும் ஒரு குறிசொல்லும் பெண் அழைத்து வரப்படுவாள் . அவள் அந்த ஆண்களில் இருந்து ஒருவரை இனம் காட்டுவாள் அதுதான் அந்தக் குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் .அதை அவன் மறுக்க முடியாது .

                                                                                                                                                                            ஆதாரம் :- புஹாரி 

                                                    மேலே கூறியது நாம் கண் காணாதது .இதில் முதல் முறையை தவிர மற்றைய அனைத்தும் அப்பட்டமான விபச்சாரம் என்பதில் சந்தேகமில்லை . இதில் ஆணாதிக்கத்திற்கான வாசலை ஒரு பெண் சாதாரணமாகவே திறக்கிறாள் . அதே நேரம் அவமதிப்புக்கான மகுடத்தையும் அவளே சூடிக் கொள்கிறாள் . ஆனால் துரதிஷ்ட வசமாக இன்றைய நிகழ்காலமும் பெண்ணுரிமை என்ற பெயரில் வேண்டுவது இத்தகு தவறான பாதையினைத்தான் . பின்வரும் சம்பவத்தை படியுங்கள் .


                                                  இது நடந்தது 1990 களில் , திருமணமான முதலிரவிலேயே தன் கணவனை வெளியே இருத்தி விட்டு , இன்னொரு ஆணோடு சல்லாபித்தாள் ஒரு பங்களாதேச பெண் . அவள்  உலகு அறிந்த 'செக்ஸ் ' எழுத்தாளர் . அவளது பெயர் 'தஸ்லிமா நஸ்ரின் '. பெண்ணுரிமையின் கீழ் அவள் கேட்டது ' ஒரு பெண் தனது கருப்பைக்குள் தாங்கள் விரும்பும் ஆணின் விந்துவை செலுத்தும் உரிமை ! (FREEDOM OF THE UTERUS) அதாவது கருப்பைச் சுதந்திரம் .

                                                           இந்த விபச்சார அழைப்புக்கு மேற்கின் பெண் விடுதலை வாதிகள் மத்தியில்  அமோக வரவேற்பு கிடைத்தது . ஒரு பெண்ணை ஆண்  எப்படி ரசிக்க ,அனுபவிக்க , பயன்படுத்த முடியுமோ அதற்கான வாயிலை அவளே திறக்கிறாள் . இவர்களும் பரிசோடும் ,மாலையோடும் படையெடுத்தார்கள் . புனிதமான் உறவை கழிவரையாக்கும் இந்த நா(ய் )கரீகத்தின் பார்வையில் எப்படி ஒரு பெண் பாதுகாப்பாய் வாழ முடியும் ? மேலே தந்த  இஸ்லாத்திற்கு முற்பட்ட அரேபிய ஆண் ,பெண் உடலுறவு முறையோடு இந்த (FREEDOM OF THE UTERUS) அதாவது கருப்பைச் சுதந்திரத்தை ஒப்பிட்டுப் பாருங்கள் நிறைய உண்மைகள் புலப்படும் .
 

No comments:

Post a Comment