Thursday, January 31, 2013

'புரோபிட் அண்ட் பெனிபிட் பேசில் ' நடக்கும் பக்கா 'கபிடலிச பொலிடிக்ஸ் ' நீதியும் கலீபா உமர் (ரலி ) காட்டிய ரியல் நீதியும் .



        விஸ்வரூபம் திரைப்பட  விடயத்தில் நடிகர் கமலுக்கோ கோடிக்கணக்கில் இழப்பாம் .தமிழ் நாட்டு அரசுக்கு அத் திரைப்படத்தை வெளியிடுவதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டும் தானாம் ! மொத்தத்தில் நடப்பு நிலவரம் எல்லாம் 'புரோபிட் அண்ட் பெனிபிட் 
பேசில் ' நடக்கும் பக்கா  'கபிடலிச பொலிடிக்ஸ் '


                                      இலட்சக் கணக்கான மனித உள்ளங்களின்   நியாயங்களை விட இலாபாங்கள் தான் முன்னுரிமை பெரும் . இந்த கிரிமினல் பொலிடிக்ஸ் தான் இன்று  உலகெங்கும் புகுந்து விளையாடுகின்றது . அநீதிகளில் நீதி காண்கிறது . ஆள்வோரைக் காக்கவே இங்கு  சட்டமும் ஒழுங்கும் . கீழே வரும் விடயத்தையும் கொஞ்சம் படியுங்கள் ஒரு ஆட்சியாளனின் வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம் .


                                        அது கலீபா உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் ஆட்சிக்காலம் .ஒரு வழக்கில் அவரே பிரதிவாதி . நீதிபதியாக ஸைத் இப்னு தாபித் (ரலி )  இருக்கிறார்கள் .வழக்கின் ஒரு கட்டத்திலே ஸைத் இப்னு தாபித் (ரலி ) வாதியை பார்த்து இவர் கலீபா என்பதை மறக்க வேண்டாம் என்ற வார்த்தையை பிரயோகித்தார்கள் . 

                                            உமர் (ரலி ) கண்கள் சிவந்தவராக எழுந்து " தங்கள் கண்களில் நானும் ஒரு சாதாரண மனிதனும் சமமாகாத வரை தங்களிடமிருந்து இந்த வழக்கில் ஒரு சரியான நீதியை எதிர் பார்க்க முடியாது " என்று கூறி விட்டு சென்று விட்டார்கள் . நீதியின் பார்வை பற்றியும் , ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இந்த சம்பவம் சிறந்த எடுத்துக் காட்டு . இதுதான் இஸ்லாத்தின் நீதி  . இன்னும் நிறைய ஒப்பிட உள்ளது .நீங்களும் தேடுங்கள் நானும் இன்ஷா அல்லாஹ் தருகிறேன் .


                             
             

No comments:

Post a Comment