Tuesday, October 16, 2012

மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் இடையில் ஒரு கச்சிதமான முடுச்சு!!



    தவறில் இருந்து தவறில் தங்கி சரியை நோக்கி ! இதுதான் இஸ்லாமிய எழுச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவீன விதி ! இன்னும் தெளிவாகச்சொன்னால் இறை மறுப்புக்கொள்கைகளின் தவிர்க்க முடியாத மேலாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற அந்த இறை மறுப்புக்கொள்கைகளின் வழிமுறைகளையே பயன்படுத்தி படிமுறை நகர்வின் மூலம் சிறுகச்சிறுக இஸ்லாத்தை அமுல் படுத்தல் என்று கூறலாம் .

                                                                             'அல்ஹம்துலில்லாஹ் ' அட இது ரொம்ப நல்லா இருக்குதே ! என அனேகமாக எல்லோரையும் பேசவைக்கும் இந்த நடவடிக்கை சாதாரண பாமர முஸ்லீம்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது அல்ல மாறாக   இதற்குப் பின்னாலும் மேற்கின் கயிறு விழுங்கிய ஆலிம் அவதாரக் கூட்டமும் இருக்கின்றனர்  .தவிர தமது இந்த செயல்களுக்கான இஸ்லாத்தின் ஆதாரத்தையும் இவர்கள் தந்தும் விடுகிறார்கள் . 

             ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் அவர்கள் காட்டும் ஆதாரங்கள் 
எந்தளவுதூரம் நிலவரத்தோடு பொருந்திப்போகின்றது என்பதை ஆராயும் தரத்தில் சமூகம் இல்லை எனும் நிலையில் இந்த 'இலுப்பம் பூ ' தீர்ப்புக்கள் சர்க்கரையாகியும் விடுகின்றன . இது ஒரு உதாரணம் ஹுதைபியா உடன்படிக்கை விட்டுக்கொடுப்பின் உதாரணமாக்கப் பட்டுள்ளது .ஆனால் இந்த சம்பவம் இதன் பின்னணி பற்றி எந்தப்புரிதலும் சமூகத்திடமில்லை (இது பற்றி விரிவாக வேறு ஒரு ஆக்கம் முன்பு  பதியப்பட்டுள்ளது ) இப்போது சமூகம் என்ன முடிவிற்கு வரும் ? அர்ரஹ்மான் எனும் அல்லாஹ்வின் பண்பு தொடங்கி விட்டுக்கொடுத்து, முஹம்மது (ஸல் ) அல்லாஹ்வின் தூதர் என்பதை விட்டுக்கொடுத்து, ஒரு பலவீனமான கூட்டம் பலமான எதிரியிடம் குறைந்த பட்ச சலுகைகளை எதிர்பார்ப்பது ! எனும் நிலைப்பாட்டை அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) செய்து காட்டியிருப்பது நாமும் செய்யக்கூடிய முன்மாதிரி . இதுதான் குப்ர் இற்கும் இஸ்லாத்திட்குமான நியாயமான போராட்டப்பாதை என்பதாகவே .


                                      
                                                                                                          எதிரிகள் உடல் ரீதியாகவும் ,உளரீதியாகவும் , உணர்வுரீதியாகவும் அத்து மீறும் போதும் தலையில் போட்டிருக்கும் தொப்பியில் இருந்து காலில் இருக்கும் செருப்பு வரை கலட்டிக்கொடுத்து நிர்வாண 
மாக நின்று பிரார்த்திப்பதே இஸ்லாம் எதிர்பார்ப்பது என ஒரு முல்லா கூட்டம் முழக்க மிட , இன்னொரு முல்லா பட்டாலியன் எதிரியின் ஆயுதத்தினால் எதிரியை அடிப்பதாக நினைத்து அவர்களின் சிந்தனைகளின் வழி தாம் இஸ்லாமிய 'ரொபின் கூடுகளாக ' தம்மை இனம் காட்ட நினைத்து அவர்களின் ஆயுதமாக மாறியும் விட்டார்கள் .இஸ்லாமிய சமூகத்தை எடுத்துப்பார்த்தால் இந்த இரண்டு தவறான  தரப்பையும் காண முடியும் .


               ஓஹ் முஸ்லீம்களே ! உண்மை என்னவென்றால் உங்களின் செயல்களை எதிரி 
விரும்புகிறான் என்றால் ,உங்களின் செயல்களை எதிரி அங்கீகரிக்கிறான் என்றால் , நீங்கள் சிந்திக்க கடமை பட்டுள்ளீர்கள் . இதன் பெயர் சரணடைவு அல்லது அடிமைத்தனம் இதில் எந்த இஸ்லாமும் இல்லை , அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) மிக நெருக்கடியான மக்கா வாழ்க்கையிலோ அல்லது பலத்தோடு இருந்த மதீனா வாழ்வில் கூட இப்படி ஒரு முன்மாதிரியை எம்மால் காண முடியாதுள்ளது . மொத்தத்தில் இந்த 'இஸ்லாமிக் ரொபின் கூடிசத்துக்கு' சுன்னாவில் ஆதாரம் இல்லை . அவர்கள் காட்டும் ஆதாரங்களும் மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் இடையில் ஒரு கச்சிதமான முடுச்சு மட்டுமே .  

                                                   

                                  

No comments:

Post a Comment