Monday, October 22, 2012

நாம் செய்யவேண்டிய பிரதான பணி என்ன ?


மனிதன் தனது உடல் சார்ந்த தேவைகளையும் ,உள்ளார்ந்த உணர்வுகளையும் திருப்திப் படுத்துவதை உறுதிப்படுத்தும் விதத்தில் இஸ்லாம் அவற்றை ஒழுங்கு படுத்துகிறது .பசி ,
இனப்பெருக்கம் , உறவுகள் போன்ற எல்லாம் இங்கு வஹி மூலம் மிகச்சரியாக ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது . தேவையான ஒன்றை புறக்கணித்தோ , மிதமிஞ்சிய கட்டுப்பாடற்ற வரையறுக்கப்படாத அனுபவிப்போ இந்த ஒழுங்கு முறையில் இருக்காது என்பதுதான் 
எமது அகீதா. 


முதலில் ஷரியாவின் எந்தப்பகுதிகளை பிரயோகிக்கலாம் எனும் சிந்தனையை விட இஸ்லாமிய அகீதாவை இன்று சமூகம் எவ்வாறு புரிந்துள்ளது ? எனும் அவதானிப்பின் ஊடாக எமது இஸ்லாமிய மயப்படுத்தல் சமூகத்தின் எல்லா மட்டங்களையும் சென்றடைகின்றதா ? என்பதும் மிக நிதானமாக ஆராயப்பட வேண்டும் .காரணம் இஸ்லாம் அகீதாவில் இருந்தே வழிமுறைகள் தோற்றம் பெறுவதாக கூறுகின்றது . எனவேதான் அல்குர் ஆன் 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ..., ஈமான் கொண்ட விசுவாசிகளே ..., மூமீன்கள் யாரென்றால் ... ' போன்ற பதங்களை 
பல இடங்களில் அல்லாஹ் (சுப) கூறுவதாக நான் கருதுகிறேன் . 

ஈமானியப் பெறுமானம் உணரப்படாத,அகீதா தெளிவற்ற பிகிஹ் பேசப்படுவது மிகப்பெரிய தவறு .இன்று சமூகத்தில் அது சர்வ சாதாரண நிகழ்வு . இதனால் தான் உலகியல் விவகாரங்களில் இருந்து மார்க்கத்தை பிரிக்கும் முதலாளித்துவ அகீதா எமது உம்மத்துக்குள்ளும் புகுந்து விளையாடுகின்றது !
முதலாளித்துவத்திட்கு இறைவனின் உள்ளமையை ஏற்றுக்கொண்டு (இறைவன் அருளிய வாழ்வியல் விவகாரங்களில் மட்டும் அவனது கட்டளைகளை ஏற்றுக்கொள்ளாமல் ) வாழ்வதும் ஒன்றுதான் ,அல்லது இறைவன் மறுத்து வாழ்பவர்களும் ஒன்றுதான் . இங்கு இருதரப்பும் சம உரிமை உடையது மதச்சார்பின்மை 
கோட்பாடானது இந்த இடத்தில்தான் ஆரம்பிக்கின்றது . தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கொண்ட ஒரு ஆன்மீக மதமாக இஸ்லாம் வாழ்ந்து விட்டுப்போவதில் முதலாளித்துவ அகீதாவிட்கு எந்தக் கவலையுமில்லை . 

முதலில் செய்ய வேண்டியது ஆன்மிகம் , உலகியல் என பிரித்து நோக்கும் மனநிலையில் இருந்து மாற்றி முஸ்லீம் சமூகத்தை தனது இஸ்லாமிய அகீதாவில் தனது இருந்தே வாழ்வியல் தோற்றம்பெற வேண்டும் எனும் மனோநிலையை உருவாக்குவதற்கான சாதகங்களையும் , சாதனங்களையும் பற்றி நாம் சிந்திப்பது ஆரோக்கியமானது .



No comments:

Post a Comment