Wednesday, October 3, 2012

சாக்கடையில் சத்தியம் சாத்தியமா ?

நீங்கள் ஒரு விடயத்தை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எதில் இருந்தாவது நல்லதை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும் எனும் உங்களது முடிவில் அதில் இருக்கும் தீமையின் அளவு அதன் ஆதிக்கப் பாய்ச்சல் அதன் நன்மையின் மீது தாக்கம் செலுத்தியிருக்காது என்ற உத்தர வாதத்தை யாராலும் தர 
முடியாது . 

                    சாக்கடை கழிவு கலந்த பாலில் இருந்து பாலை மட்டும் பிரித்து பயன் பெற முனைவது அதிக 'ரிஸ்க் ' அதவிட அப்பழுக்கற்றது ,தீமையே இல்லாதது இஸ்லாம் என்பதுதான் எமது நம்பிக்கை அதன் பிரயோகம் தொடர்பில் ஜாஹிலீயத் உடன் பாலம் போட முனைவது இஸ்லாத்திடம் இந்த காலத்திற்கு எதுவும் இல்லை என்ற கருத்தையே வலுப்படுத்துகின்றது . 


                                       அறிவியலையோ ,தொழில் நுட்பத்தையோ முஸ்லீம் உம்மா வெளியில் இருந்து பெறவேண்டாம் என நான் கூறவில்லை  அவை பொதுவானவை .அனால் குப்ரின் சித்தாந்தத்தை சரிகாணும் அவர்களின் நாகரீகத்தை தழுவச் சொல்லும் சித்தநந்த அரசியலையும் அதன் வழிமுறைகளையும் எடுப்பது தொடர்பில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும் . எமது சித்தாந்தத்தில் பிழையாக கருதுவதை எதிரியின் சித்தாந்தத்தில் சரிகாணப்பட்டிருக்கும். 



இப்போது அதிகார நிலையில் மிகைத்திருக்கும் எதிரி அவனது நாகரீகத்தை எம்மீது திணிக்கும் முகமாக தவறுகளை 
சரிகாண பணிப்பான்  .  இப்போது சரணடைவென்பது காலத்தின் தேவையாக உணரப்படும் .எஞ்சியதை வைத்து எதோ வாழ்ந்து விட்டுப்போதல் எனும் தோல்வி அரசியலின் கைதிகளாக நாம் வாழ தலைப்பட்டு விடுவோம் .
அதை நாம் வெற்றிகரமாக சொல்ல வேண்டும் என்பதே துருக்கி அரசியலும் ,எகிப்து அரசியலும் ,ஜெர்மனியில் இருந்து'லம்யா
கடோலின் 'கருத்தும் காட்டி நிற்கின்றது . 
                                 
மேற்கும் இதைத்தான் எதிர்பார்க்கின்றது . இந்த வெற்றி எனும் தோல்வியோடு 'டெல் அவிவ் ' வரை ஒரு முஸ்லீம் பயணிக்கலாம் . 'வைட் ஹவுஸ்' செங்கம்பளத்தில் கூட்டுத் தொழுகை கூட முஸ்லீம்கள் நடத்தலாம் . யஹூதியும் , நசாராவும் பாதுகாப்பு வேறு கொடுப்பான் ஆனால் நாம் 
ஒரு கௌரவ அடிமையாக எமது மத அடையாளங்களோடு வாழ்ந்து விட்டு போகலாம் அவ்வளவுதான் .
                                                             
                          

No comments:

Post a Comment