Thursday, October 4, 2012

விடையை தேடும் கேள்விகளும் விளைவை வேண்டும் தூண்டல்களும்.

# உங்கள் முடிவு  மனித வாழ்வியலுக்கான சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்விற்கு உண்டா இல்லையா ? உண்டு என்றால் நீங்கள் தற்போது எந்த சட்டத்தின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் ? 


#இன்றைய குப்ரிய வழிமுறைகள் எந்த ஆதாரத்தில் இருந்து தமது சட்டங்களை எடுத்துக்கொள்கின்றது ?முஸ்லிமும் அவ்வாறு எடுக்க முடியுமா ?


#அல்லாஹ்(சுப) ஹராம் ஆக்கிய பல விடயங்களை இவர்கள் ஹலால் என்கிறார்கள் ! நீங்களும் அவ்வாறு ஏற்றுக்கொள்கிறீர்களா ? 


#சுதந்திரம் என்பதற்கான எல்லை அல்லாஹ் (சுப ) அருளியுள்ள வரையறையா அல்லது காலத்தின் தேவை என மனிதன் வகுத்துக்கொள்வதா? அவர்கள் கூறும் சுதந்திரத்தின் எல்லை வரையறை அற்றது .அது இயற்கைக்கு மீறிய எல்லைவரை செல்லக்கூடியது . நீங்களும் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா ?(தயவு செய்து 'லிபர்ட்டி ' என்பதன் வரை விளக்கனத்தை நீங்களே தேடிப்பாருங்கள் )


# பெண் விடுதலை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளும் மேற்கு (குறிப்பிட்ட சிலர் தவிர 'மேஜோரிட்டியாக') பெண்களை மொடளின்காகவும் , ஒரு காமப் படைப்பாகவும் தான் விளம்பரப்படுத்துகிறது . அனைத்து சமூக தொடர்பு சாதனங்களையும் முடுக்கிப்பார்த்தால் நீங்களே புரிந்து கொள்ளலாம் .அல்லது அதுதான் சரியான பெண்ணுரிமை என ஏற்றுக்கொள்கிறீர்களா ? 


மேற்கின் கொள்கையில் ஒரு குறிப்பிடப்படும்படியான அம்சம் மனிதஉரிமை மற்றும் அதனை பாதுகாத்தல் ஆகும். அவ்வுரிமைகளாவன, வழிபாட்டு உரிமை, பேச்சுரிமை, சொத்துரிமை மற்றும் தனிமனித உரிமைகளாகும். சொத்துரிமையானது இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவக் கொள்கையின் வழித்தோன்றலேயாகும். இதன் மூலம் தனியுடமைக்கம்பெனிகள் தோன்றி மக்களை காலனிகளாக்கி அவர்களின் வளங்களை அபகரிக்கத் து}ண்டுகின்றன.






மேற்கண்ட உரிமைகள் இஸ்லாத்திற்கு முற்றிலும் மாறுபட்டவையாகும். ஒரு முஸ்லிமிற்கு அல்லாஹ்வை தவிர வேறொரு கடவுளை வணங்க அனுமதியில்லை.
ஒருவர் இஸ்லாத்தை ஏற்று பின்னர் தனது தீனை மாற்றிக்கொண்டால் அவர் பின்னர் இஸ்லாத்திற்கு திரும்புமாறு அழைக்கப்படுவார். அவர் அதனை ஏற்காவிடில் அவருக்கு மரணதண்டனை வழங்கப்படும்.
நபிகள் நாயகம்(ஸல்) குறிப்பிடுகிறார்கள் :

“தீனினின்றும் மாறியவர் கொல்லப்படவேண்டியவர்"
இஸ்லாத்தின் கருத்துக்களைத்தவிர வேறு எந்தக்கருத்துக்களையு
ம்
ஏற்றுக்கொள்ள ஒரு முஸ்லிமிற்கு அனுமதியில்லை. சொத்துரிமை என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைவதேயாகும். முதலாளித்துவக் கொள்கையான “முடிந்தால் எந்தவகையான சொத்துக்களையும் எப்படிவேண்டுமானாலும் அடையலாம்" என்பது இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாத்தில் தனி மனிதனுக்கு தடுக்கப்பட்டவையான சொத்துக்களை அடைய முடியாது. வட்டி கொடுத்தல் வாங்குதல் மூலம் சம்பாதிப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபானம், விற்றல், பன்றி இறைச்சி மூலம் சம்பாதித்தல் போன்றவை தடுக்கப்பட்டுள்ளன. எனவே எவ்வௌ;வழிகளில் சொத்துக்களை சம்பாதிக்க முடியும் என்பதை இஸ்லாம் வரையறைசெய்துள்ளது.
தனிமனித சுதந்திரம் என்பது. இஸ்லாத்தில் இல்லை. எந்த மனிதனும் இஸ்லாமிய சட்டதிட்டங்கட்கு உட்பட்டே நடக்கவேண்டும். ‘ஃபர்த்’ ஆன விசயங்களை செய்யாவிடினும் தண்டனையே! ஹராமான விசயங்களை செய்தாலும் தண்டனையே! உதாரணமாக தொழுகையை நிறைவேற்றாத ஒரு முஸ்லிம் தண்டிக்கப்படவேண்டியவர். மது அருந்துபவர், விபச்சாரம் செய்தவர் தண்டிக்கப்படிவேண்டியவர். எனவே சுதந்திரம் என முதலாளித்துவக்கொள்கையில் வரையறுக்கப்பட்ட எவையும் சுதந்திரம் அல்ல. மேலும் அவை இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகளாகும்.

நீங்களும் அவ்வாறு ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா ?

#குப்ரியக் கொள்கையின் ஒரு முக்கிய அம்சம் மக்களாட்சியாகும். மக்களுக்காக மக்களால் மக்களாகவே நடத்தும் ஆட்சியே மக்களாட்சியாகும். இவ்வாட்சிமுறையில் அனைத்து ஆட்சி அதிகாரமும் மக்கட்கேயாகும். எனவே மக்களே தமக்காக சட்டமியற்றுபவர் ஆவர். அவர்களே தாம் விரும்பிய சட்டத்தை நடைமுறைபடுத்தும் அதிகாரம் பெற்றவர்கள். தமக்கு விருப்பமில்லாத சட்டங்களை அமுல் செய்வதினின்றும் தடுத்து விடுவதற்கும் மக்களுக்கு அதிகாரமிருக்கிறது. இந்த சட்டங்கள் அனைத்தையும் அனைத்து மக்களும் நேரடியாக பங்குபற்றி இயற்ற இயலாததால் தமக்காக ஒரு பொது பிரதிநிதியை நியமிப்பார்கள். இதன்படி தமது சார்பாக அவரிடமே சட்டமியற்றும் அதிகாரத்தை அளிக்கின்றனர். ஆட்சிசெய்யும் அதிகாரமும் மக்கட்கே. எனவே தமக்காக ஒரு பொது ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கின்றனர். எனவே மேற்கத்திய முதலாளித்துவ ஆட்சியில் மக்களே அனைத்து அதிகாரமும் படைத்தவராவர்.

ஆனால் இஸ்லாத்தை தழுவியவருக்கு இது ஒரு குஃப்ர் முறையாகும். ஏனெனில் இது ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட, இஸ்லாமிய ஷாPஆ ஏற்றுக்கொள்ளாத ஒரு விசயமாகும். எனவே மக்களாட்சிமுறையில் ஆள்வது இறைநம்பிக்கையற்ற முறையில் ஆள்வதாகும். மக்களாட்சி முறைக்காக அழைப்பு விடுப்பது குஃப்ர் முறைக்காக அழைப்பு விடுப்பதாகும். இஸ்லாத்தில் இது முற்றிலும் தடுக்கப்பட்டதாகும். மக்களாட்சிமுறை இஸ்லாமிய சட்டதிட்டங்கட்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில் ஒரு முஸ்லிம் நடைமுறைபடுத்தவேண்டிய சட்டம் அல்லாஹ்விடமிருந்தே வருவதாகும்.ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் அடிமை. ஆதலால் அல்லாஹ்(சுபு) அமைத்த பாதை வழி நடப்பதும், அவன் அனுமதிக்காதவற்றினின்று விலகியிருப்பதும் கடமையாகும். அனைத்து ஆட்சி அதிகாரமும் அல்லாஹ்(சுபு)விடமே இருப்பதால் முஸ்லிம் உம்மா தனது விருப்பப்படி நடக்க இயலாது. ஷாPஆவிடமே அனைத்து அதிகாரமும் இருப்பதால் அதன் வழி மட்டுமே செல்ல இயலும். சட்டமியற்றுபவன் அல்லாஹ் மட்டுமே. அதனால் முஸ்லிம் உம்மா தானாக சட்டமியற்ற இயலாது. முஸ்லிம் உம்மா அல்லாஹ்(சுபு) விலக்கியவற்றை (உதாரணம்:வட்டிப்பணம்) நடைமுறைப்படுத்த இசையுமானால் அச்சட்டத்திற்கு எவ்வித அங்கீகாரமும் இஸ்லாத்தில் இல்லை. அடிப்படையில் அது ஷாPஆவிற்கு எதிரானது. அதனை எதிர்த்து போராடுவது கடமையாகும். ஆனாலும் மக்களை ஆட்சி புரியவும், ஷாPஆவை நடைமுறைபடுத்தவும் அதிகாரம் படைத்த ஆட்சியாளரை தமக்காக தேர்ந்தெடுக்கும் உரிமை முஸ்லிம் உம்மாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆட்சியாளர் சத்தியப்பிரமாணம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே ஆட்சியாளர் என்பது அல்லாஹ்வின் சட்டமனைத்தையும் நடைமுறைபடுத்துபவரே! ஏனெனில் சட்டமனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே அருளப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களாட்சி முறை இஸ்லாமிய முறை அல்ல. மேலும் அது இஸ்லாத்திற்கு எதிரான ஒரு கோட்பாடாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.நீங்கள் இதை ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா ?

#
மகிழ்ச்சி தொடர்பில் மேட்கத்தேயத்தின் எதிர்பார்ப்பு தனி மனித திருப்தியே , ஆனால் ஒரு முஸ்லிமின் திருப்தி இறைவனின் திருப்தியே .இதில் நீங்கள் யார் பக்கம் ?

#மார்க்கத்தை வாழ்வியலிலிருந்து பிரிக்கும் கொள்கையிலிருந்து மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.ஆனால் இஸ்லாமிய நாகரீகம் அல்லாஹ் (சுப ) அருளியுள்ள வாழ்க்கை மீதே அமைய முடியும் .நீங்கள் எதிர் பார்ப்பது மேற்கின் அந்த பிரி கோட்டு வாழ்க்கையா ?இஸ்லாத்தின் மார்க்கத்தில் இருந்தே வாழ்க்கை கட்டமைக்க பட வேண்டும் எனும் வாழ்க்கையா ?


இப்படி ஏராளமாக அடுக்கிக்கொண்டே செல்லலாம் . சில நேரம் நீங்கள் அதில் நல்லது போல் இஸ்லாத்தின் சில விடயங்களோடு மேற்போக்காக பொருந்திப்போகும் சிலதை வைத்துக்கொண்டு அவர்களை சரிகண்டால் . இப்போதே நீங்கள் செய்ய வேண்டிய வேலை உங்களிடம் இருக்கும் அல் குர் ஆன் பிரதிகளை எரித்தோ புதைத்தோ விடுங்கள் ! அது இனி உங்களுக்கு தேவைப்படாது .









No comments:

Post a Comment