Saturday, October 20, 2012

மக்கள் போராட்டம் - கவனிக்கத் தவறிய உண்மைகள்



மத்தியகிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியானது அவர்களிற்கான விடுதலைக்கான வழி என அம்மக்களால் உணரப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியில் பொருளாதார ரீதியில் உரிமைகள் ரீதியில் எதிர்கால சுபீட்சமான வளங்கள் ரீதியில் தமக்கு ஒரு மாற்றத்தை இந்த போராட்டங்களின் வெற்றி கொண்டு வந்து விடும் என அவர்கள் நம்புவதன் விளைவே மேற்படி புரட்சிகள் வேகமாக வலுவடைவதும் வெற்றியை நோக்கி நகர்வதுமாகும்

இந்த மக்கள் போராட்டமானது அரசுகளை அரசியல் தலைவர்களை இராணுவங்களை ஏன் நாடுகளின் எல்லைகளில் கூட மாற்றங்களை கொண்டு வர வல்லன. சுதந்திரம் என்பதற்கும் நவீன வாழ்வியல் மாற்றம் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இன்றைய அராபிய மக்கள் விடுதலை எனும் பேரில் நவீனத்துவத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையையே கோரி நிற்கின்றனர். மாற்றங்கள் ஒரு போதும் சுதந்திரங்களை வழங்கப் போவதில்லை. சுதந்திரமே மாற்றங்களைப் பெற்றுத் தர முடியும். ஆனால் நடப்பதோ சுதந்திரத்தின் பேரால் மாற்றங்களை அடைய முற்படுவதே. மீண்டும் புதிய போத்தலில் பழைய மதுவே கிடைக்கும்.

உரிமைகளையும் மாற்றங்களையும் ஆளும் அதிகார வர்க்கத்தினை அழுத்தப் படுத்தி பெற்றுக்கொள்ளும் முறைக்கு மாறாக அரச கட்டிடங்களை கொளுத்துவது அல்லது கைப்பற்றுவது வீதிகளில் இறங்கி ஆர்பாட்டம் செய்வதன் மூலம் மாமூல் வாழ்க்கையை சீர்குலைப்பது சதுக்கங்களில் கூடி தரித்திருப்பது என்பவற்றின் ஊடாக அரசை ஸ்தம்பித நிலைக்குட்படுத்தி ஆட்சியை கவிழ்பதன் ஊடாக புரட்சி வெற்றி பெற்று விட்டதாக குதுகலித்து வீதிகளில் ஆடிப்பாடித் திரிவது நகைப்புக்கிடமான ஒரு விடயம். ஒரு சாத்தானை வீசி எறிந்துவிட்டு இடைக்கால ஆட்சி என்ற பெயரில் வெளிப்படையாக முகம் காட்டாத இன்னொரு சாத்தானிடம் அல்ல சாத்தான்களிடம் ஆட்சி பொருப்பை 24 மணி நேரங்களுல் ஒப்படைப்பதென்பது நீண்ட கால அழிவிற்கே வழிவகுக்கும்.

இனிப்பு மிட்டாய் கேட்டு ஆர்பரித்து அடம்பிடித்து அழும் குழந்தைக்கு ஏதோ ஒரு இனிப்பு மிட்டாயை கொடுத்தால் அது அடங்கிவிடும். இனிப்பில் நச்சு மருந்து கலந்திருப்பது கூடத்தெரியாமல் அவசரமாக உண்ணும். ஆம் அந்த வேலையைத்தான் அமெரிக்கா செய்கிறது. ஆளும் வர்கத்துடனும் பேசுவதில்லை. போராடும் வர்கத்துடனும் பேசுவதில்லை. இடைக்கால நிர்வாக் சயையுடன் மட்டுமே பேசும். ஆம் C.I.A. பேசும். இது தான் இப்போது அமெரிக்காவிற்கு இலகுவான வழியாகத் தெரிகிறது.

தெருக்களில் இறங்கி போராடுபவர்கள் இறைவனை நம்புகிறார்களோ இல்லையோ மேற்குலகின் ஊடகங்களை நம்புகிறார்கள். அவையே தம் மக்கள் புரட்சியை காப்பாற்றும். உலகறியச் செய்யும் என. இறை உதவியை விட சமூக வலைத்தளங்களின் உதவி அவர்களிற்கு முக்கியமாகி போய்விட்ட அவலமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 

போராட்டம் இஸ்லாமிய அடிப்படைவாதிளின் கைகளில் சென்று விடாமல் இருக்க அமெரிக்காவும் மேற்குலகும் பெரு முயற்ச்சி செய்கின்றன. இஸ்லாம் அல்லாத சக்திகள் தலைமைத்துவத்தை கையில் எடுக்கவும் வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்படவும் வேண்டும். அப்போதுதான் அரபு தேசங்களை இன்னும் பல துண்டங்களாக பிரிக்கலாம். அதற்காகவே அவை அவசரமாக அரசியல் அணிகளுடன் பேச முற்படுகின்றன.இணையத்தளங்களை நம்புவது என்பது மேற்குலகை நம்புவது. மேற்குலகை நம்புவது என்பது அமெரிக்காவை நம்புவது. அமெரிக்காவை நம்புவது என்பது இஸ்ரேலை நம்புவது. ஆக ஸியோனிஸத்தை நம்பி முற்று முழுதாக  நாம் களமிறங்கியுள்ளோம்.போராட்ட நிகழ்ச்சி நிரல் தற்போது அமெரிக்காவசம். எகிப்தில் இது தான் நடந்தது. இன்னும் பல நாடுகளில் நடக்கப்போகிறது.

மேற்படி போராட்ட காலப்பகுதியில் எத்தனை மெளாசாட் மற்றும் C,I.A. உளவாளிகள் களமிறங்கி தம்மை போராட்டவாதிகளாக காட்டிக்கொண்டு இராணுவத்துள் ஊடுருவி தகவல் சேகரித்திருப்பார்கள். அரபு நாடுகளின் பாசிஸ சர்வாதிகாரிகளையும் அராபிய மன்னர்களையும் பலப்படுத்தியது இந்த அமெரிக்காதான். அவர்களை மீண்டும் பலவீனப்படுத்தி அழித்ததும் இந்த அமெரிக்காதான்.


ஈராக்கில் சதாமை உருவாக்கி வலுவாக்கி பின் குர்திஷ்களையும் வலுப்படுத்தி சதாமை அழித்தது இந்த அமெரிக்காதான். உஸாமா பின் லாடனை உருவாக்கி வலுப்படுத்தி பின் அவனை அழிக்க முற்படுவதும் இந்த அமெரிக்காதான். ஆப்கானிய தலிபான்களை ஒன்றினைத்து உருவாக்கியதும் பின் அவர்களை அழிப்பாதாக ஆப்கானிஸ்தானுல் உள்நுழைந்ததும் இந்த அமெரிக்காதான். அடுத்து லிபியாவின் கொழுத்த எண்ணெய் வயல்களை கைப்பற்ற சர்வதேசப் படையின் வருகை தொடர்பாக நிறையப் பேச முற்படுவதும். இந்த அமெரிக்காதான். இப்போது புரிகிறதா. ஆம் புரியத்தானே
 வேண்டும்......

No comments:

Post a Comment