அரசியல் நோக்கங்களுக்காக வன்முறையை பயன்படுத்தல் பயங்கர வாதம் என்றால் உலகின் தலைவிதி இன்று அந்த அரசியலால் தான் நிச்சயிக்கப்படுகின்றன ! . வன்முறையின் வடிவம் பற்றி எமக்குள் ஒரு மயக்கம் உண்டு ; அது அடிப்படையில் கருவி ஏந்தியிருக்கும் துன்ப்ருத்தும் ,கொலை செய்யும் ...இப்படி பல ஆனால் அதை விட ஆபத்தானது அது நான் என்ற மமதையோடு பயத்தை மூலதனமாக்கி ஆட்சி செய்வது .இப்போது அதன் கீழ் மக்கள் தினம் தினம் உயிரோடு
இறந்து கொண்டே இருப்பார்கள் .அனேகமாக எல்லா சர்வாதிகாரத்தினதும் பொதுப்பண்பு இந்த பயத்தை
மூலதனமாக்குதலே .
இது நடந்தது 1985 மே மாதம் 14 ம் திகதி அது வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அனுராத புற நகரம் வழமை போல இயங்க ஆரம்பித்திருந்தது .இலங்கை இராணுவ சீருடையில் காவல் கடமையும் வழமை போலவே . திடீரென பொது மக்களை நோக்கி அவர்கள் சுட ஆரம்பிக்கிறார்கள் ! திகைப்பும் ஆச்சரியமும் கலக்க மக்கள் ஓடத் தொடங்கினார்கள் . அது புலிகள் என மக்களுக்கு அப்போதுதான் புரிந்தது .
தாங்கள் ஆற்றல் மிக்க கொலை இயந்திரங்களை அல்ல ஒரு தெளிவான இராணுவ சர்வாதிகாரத்தை தாம் வளர்க்கிறோம் என்பது இவர்களுக்கு புரியவில்லை இது இன்னொரு சம்பவம் இது சிங்கள தேசத்தில் ஒரு சிங்கள மகனுக்கு எதிராக அல்ல அநீதியை தட்டிக்கேட்ட தமிழ் மகன் ;இவரது பெயர் ரஜனிகாந்த் யாழ் கல்வியங்காட்டை சேர்ந்த இவர் ஒரு பட்டறைத் தொழிலாளி 'டெலோ ' இயக்கத்தை சேர்ந்த சிலர் சில பெண்களுடன் தகாத செயல்களில் ஈடுபட்டதை கண்டித்துள்ளார் .
No comments:
Post a Comment