Monday, October 22, 2012

ஹிக்மத்தால் மீறப்படும் ஹராம்கள் !!!



கடந்த இரு மாதங்களுக்கு முன்  கொழும்பு பிரதான நூல் நிலையத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது . முதலாளித்துவ ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் குரலாக அந்த கண்டனக் கூட்டம் . அமைந்திருந்தது . அக்கூட்டத்திலே விசேடமாக I.M.F பற்றியும் ,அதன் பட்டவர்த்தனமான சுயநலவாத முகம் தொடர்பிலும் பல தெளிவான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன . இவ்வளவிற்கும் இந்தக்கூட்டம் முஸ்லீம் அல்லாத அந்நிய சமூகத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது !

அதே நேரம் முஸ்லீம் உலகின் இஸ்லாமிய எழுச்சியின் ஜம்பவான்களாகவும், இஸ்லாமிய கிலாபா அரசை அமைக்கும் சிந்தனாவாதிகள் என எதிர்பார்க்கப்பட்டவர்களுமான துருக்கி , எகிப்திய இன்றைய ஆட்சியாளர்களின் வினோதமான ஒரு அண்மைய நடவடிக்கை பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும் . அது இதுதான் துருக்கி I.M.F இற்கு ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி அளிக்க உடன்பட்டிருக்க ,எகிப்து I.M. F இடம் நான்கு தசம் எட்டு பில்லியன் 
கடனுதவி கேட்டுள்ளது !! ஏன் துருக்கி அந்தக்கடனை நேரடியாக எகிப்திடம் வழங்க முடியாதா ? என குறுக்குக் கேள்வி கேட்காதீர்கள் . இது ஹிக்மத் !


அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை தெரியுமா ?! அதில் அலாவுதீன் அந்த அற்புத விளக்கை சுரண்டுவார் அதன் போது அந்த விளக்கின் உள்ளிருந்து பூதம் கிளம்பிவந்து நான் உன் அடிமை உனக்கு என்ன வேண்டும் கேள் ?
எனக்கூறும் ! அலாவுதீனும் கேட்பார் ;பூதமும் கொடுக்கும் . இங்கு பூதம் அலாவுதீனின் 
அடிமையா ? அலாவுதீன் பூதத்தின் அடிமையா ? என்பது கேட்கப்படக்கூடாத கேள்வி . 


அதேபோல இன்றைய முதலாளித்துவ ஏகாதிபத்திய சுரண்டல் உலகின் அற்புதமான பூதம் I.M.F அந்த ஏகாதிபத்தியத்தை பூசி மொழுக அந்த ஆனந்தத்தில் I.M.F துள்ளியோடிவந்து நாம் கேட்கும் உதவிகளை செய்யும் ! இந்த வெட்கம் கெட்ட செயலின் பெயர்தான் வினைத்திறன் மிக்க அரசியல் சாணாக்கியம்.


No comments:

Post a Comment