Friday, October 12, 2012

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?


விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ச்சியாக ஆயுதக் கப்பல்கள் வந்தபோது கிடைத்த பல வெற்றிகள், ஆயுத சப்ளை ட்ரை-அவுட் ஆனபோது மாயமாக மறைந்து போயின. 2002-ம் ஆண்டு, ஆயுத சப்ளை கைமாறியது. அதன்பின் எந்தவொரு தாக்குதலிலும் புலிகள் ஜெயித்து புதிய இடங்களை கைப்பற்றவில்லை.
ஏற்கனவே 2002-க்கு முன் கிடைத்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு, இலங்கை ராணுவம் முன்னேறுவதை சிறிது காலம் தடுக்க முடிந்தது. அதன்பின் தொடர்ச்சியான பின்வாங்கி, (தேசிய வரைவிலக்கணத்தில், ‘தந்திரோபாய பின்வாங்கல்’) முள்ளிவாய்க்காலில் அனைத்தும் முடிந்து போனது.


“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 2002-ல் ஆயுத சப்ளையை தெரியாமல் கைமாற்றி விட்டார். என்ன நடக்கிறது என்பதை ரியலைஸ் பண்ணும் முன், வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது” என்றும் ஒரு தரப்பு சொல்கிறது. அது அவ்வளவு சரியான கருத்து அல்ல. காரணம், அதற்கு முன்பும் சில தடவைகள் வேறு ஆட்களை வைத்து செய்ய முயன்ற ஆயுத இறக்குமதி முயற்சிகள், செம அடி வாங்கியிருந்தன.
2002-ம் ஆண்டு ஆயுத சப்ளை இலாகாவையும், கப்பல்களையும் கே.பி.-யிடம் இருந்து கைமாற்றுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, மற்றொருவரை வைத்து செய்ய முயன்ற ஆயுத இறக்குமதி பற்றி பார்க்கலாம். இந்த விவகாரத்தை ஏன் பிரஸ்தாபிக்க வேண்டியுள்ளது என்றால், “விஷயம் தெரியாதவர்கள் ஆயுத இறக்குமதி செய்ய முயன்றால், சொதப்பலில் முடியும்” என்பதை பிரபாகரன், ‘ஹார்டு வேயில்’ பல வருடங்களுக்கு முன்பே அனுபவ ரீதியாக அனுபவித்தவர் என்பதை காட்டுவதற்காகவே!

அப்படியிருந்தும், 2002-ல் ஆயுத சப்ளையை முழுமையாக கைமாற்றி விட்டதை, என்னவென்று சொல்வது? நாகரீகமாக சொல்வதானால், விதியின் விளையாட்டு என்று வைத்துக் கொள்வோம்.

நாம் கூறும் சம்பவம் துவங்கியது தமிழகத்தில். 1980-களின் நடுப்பகுதியில். எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. அதுவரை புலிகளிடம் அதிகமாக இருந்தவை, இந்திய அரசால் ரகசியமாக கொடுக்கப்பட்ட ஏ.கே-47 ரக துப்பாக்கிகள்தான். இந்திய அரசே, தமது ராணுவத்தில் போட்டு அடித்து, அடிமாடாக கொடுத்த, பழைய துப்பாக்கிகள்.

அப்படியான நிலையில், தோளில் வைத்து டாங்கிகளையே சுடக்கூடிய புத்தம்புதிய ஆர்.பி.ஜி. (RPG – Rocket Propelled Grenade) ரக துப்பாக்கிகள் லெபனானில் வைத்து கே.பி.-யால் வாங்கப்பட்டன. அவற்றை கார்கோ கப்பல் ஒன்றில் ஏற்றி அனுப்பும் ஏற்பாடுகளும் கே.பி.யால் செய்யப்பட்டன.
அந்த நாட்களில், புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட, பல தளபதிகள் தமிழகத்தில்தான் தங்கியிருந்தார்கள். இதனால், ஆயுதக் கப்பலை இந்தியாவுக்கு கொண்டுவருவது என்றும், அதன்பின் படகுகள் மூலம் வேதாரண்யத்தில் இருந்து இலங்கை கொண்டு செல்வது என்றுமே திட்டமிடப்பட்டது.
லெபனானில் பெறப்பட்ட ஆயுதங்கள், பெரிய கார்கோ கண்டெயினர் (40 அடி கண்டெயினர்) ஒன்றில் ஏற்றப்பட்டு, அவற்றுக்கு மேல் மறைப்பு ஒன்று போடப்பட்டது. அதன்மேல் ஒரு பழைய பிரிண்டிங் மெஷின் ஏற்றப்பட்டது. இந்த 40 அடி கண்டெயினர், போர்ட் ஆஃப் பெய்ரூட் துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

போர்ட் ஆஃப் பெய்ரூட் துறைமுகம், பெய்ரூட்டின் கடற்கரை (மெடிட்டரேனியன் கடல்) ஓரமாக, செயின்ட் ஜோர்ஜ் பேயின் (Saint George Bay) கிழக்கு பகுதியில் உள்ளது. இங்கிருந்து கார்கோ கப்பல்கள், ட்ரான்ஸ் ஷிப்மென்ட் கண்டெயினர்களுடன் இந்தியா செல்வது வழக்கம். கப்பலில் ஆயுதங்கள் ஏற்றப்பட்ட நேரத்தில், கே.பி. அங்கிருந்தார். கப்பல் சென்னை துறைமுகத்தை நோக்கி புறப்பட்டது.

அதன்பின் விமானம் மூலம் புறப்பட்ட கே.பி., சென்னை வந்தடைந்தார்.
கப்பல் சென்னை துறைமுகத்தை அடையும் முன், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருடன் அவரது ராமாவாரம் தோட்டத்தில் சந்திப்பு ஒன்று நடந்தது. பிரபாகரனும், கே.பி.-யும் எம்.ஜி.ஆரை சந்தித்தனர். கப்பலில் கண்டெயினர் ஒன்று வருகிறது என்ற விஷயம் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டது.
“கண்டெயினரை திறந்தவுடன், பழைய பிரிண்டிங் மெஷின் மட்டுமே தெரியும்” என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லியபோது,

No comments:

Post a Comment