Sunday, October 28, 2012

தீர்வு ஒரு இஸ்லாமியப் பார்வை ...


 
    முஸ்லீம்களின் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தவறு ஜாஹிலீய மேலாதிக்க சுழலை ஜீரணிக்க கற்றுக் கொண்டதே . அதில் இருக்கும் ஓட்டை உடைசல்களை சில இஸ்லாமிய 'பிளாஸ்டர்கள்'  மூலம் 'பெட்ச்' போட்டு' டச் ' பண்ணினால் அது இஸ்லாமாகி விடும் அல்லது அதுதான் இஸ்லாமிய தீர்வு ! என சிந்திக்க கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது . இந்த மகத்தான பணி மன்னிக்கவும் பிணி இஸ்லாமிய இயக்கங்களாலேயே செய்யப்படுகின்றது . இது முற்றிலும் பிழையான சுன்னாவுக்கு முரணான ஒரு வழிமுறையாகும் .

                                   
        அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) இத்தகு இஸ்லாமிய பிரயோகத்தை செய்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை .மாறாக இஸ்லாம் பிரயோகிக்கப்பட அது நிபந்தனை அற்ற அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் .அந்த நிபந்தனை அற்ற அங்கீகாரத்தில் இருந்து தனிப்பெரும் சக்தியாகவே தனது வழி முறைகளை அமுல் படுத்தும் . அதுவரை நடக்கும் இஸ்லாத்தின் எல்லா போராட்டங்களும் இஸ்லாத்தை தனிப்பெரும் சக்தியாக நிலை நாட்டுவதற்கான கருத்தியல் போராட்டமே . ஆனால் குப்ரிய மேலாதிக்கத்தின் மத்தியில் அந்த குப்ரியத்தின் தவறுகளையும் தீமைகளையும் இடித்துரைப்பதையும் ,சுட்டிக் காட்டுவதையும் தொடர்ச்சியாக செய்யும் . அதனை இஸ்லாத்தின் அகீதாவோடு தொடர்பு படுத்தியதாகவே கூறும் .

                       சூரா அல் மாஊன் , சூரா அல் ஹுமஜா,சூரா அத்தகாசூர் , சூரா அல் ஆதியாத் ,சூரா அல் லுஹா ,சூரா அல் பலத் , சூரா அல் பஜ்ர் ........இப்படி இன்னும் பல மக்கி சூராக்களில் அந்த சமூக 
சூழலின் அநீதிகளை , தீமைகளை சிலாகித்து வஹி பேசியது உண்மைதான். ஆனால் தனது தீர்வை முன் வைத்து இப்படி செய்யலாமே , அப்படி செய்யலாமே என்று கூறவேயில்லை .
                                                                             மாறாக நபிகளாரின் (ஸல் )
ஓன்று குவிக்கப்பட்ட தெளிவான பார்வை இஸ்லாத்திற்கு பலத்துடன் கூடிய நிபந்தனைகள் அற்ற தனிப்பெரும் சக்தியாக நிலைநாட்டும் 'நுஸ்ராவை' வேண்டிய போராட்டமாகவே மக்காவில் இருந்தது .
எனவே தீர்வு எனும் விடயத்தில் இஸ்லாம் பத்துக்கு மத்தியில் பதினொன்றாக ஒன்றை சொல்லிவிட்டு போகாது . அமுல் நடாத்துவதற்கான வாயில்களை திறந்த நிலையிலேயே தீர்வைப் பற்றி பேசும் .    
                              முஸ்லீம்களாகிய நாங்கள் இந்த காலத்தின் தேவையாக செய்யவேண்டிய கட்டாயப் பணி என்னவென்றால்  .  இஸ்லாத்தை தனிப்பெரும் சக்தியாக்கி தீர்வுக்கான வாயில்களை திறந்து  உலகின் அநீதிகளுக்கான , தீமைகளுக்கான இஸ்லாத்தின் தீர்வை சுதந்திரமாக பெற்றுக்கொடுக்கும்  தொடர் போராட்டமே . வல்ல நாயன் இதற்கு  அருள் புரிவானாக .

           
 
                                      
                          

No comments:

Post a Comment