Friday, October 19, 2012

ஓரம் போ ! ஓரம் போ ! பேரினவாதச் சிங்கம் வருது !


          தன்மைகளும் வடிவங்களும் வேறுபட்டிருந்தாலும் மிக மோசமான அரசியல் ,இராணுவ அழுத்தத்தில் முழு உலகிலும் முஸ்லீம் உம்மா நெருக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது . உளரீதியாகவும் ,உணர்வுரீதியாகவும் ,உடல் ரீதியாகவும் அதிக பட்சமாக மரண அச்சுறுத்தல் வரை இந்த அநீதி தொடர்கின்றது .இந்த அடிப்படையிலே தான் சிறுபான்மை  வாழ் முஸ்லீம்கள் தொடர்பில் தற்போது பேரினவாதம் தனது கொடிய கரங்களை பதிக்க முயல்கின்றது என்றால் அது ஒரு மிகையான கருத்தல்ல .


           முஸ்லீம்களை மிக மோசமானவர்களாகவும்,சூறையாட வந்தவர்கள்  என்ற   கருத்தோட்டத்தை தமது இனத்தினர் மத்தியில் பரப்புவதோடு தமது  சிந்தனைகளையும் , வழிமுறைகளையும் இழிவு படுத்தும் மற்றும் அவமதிக்கும் சமூகமாக முஸ்லீம்களை பார்க்கத்தூண்டும் அதிதீவிர பிரச்சாரத்தையும் நாளுக்கு நாள் இந்த பேரினவாதிகள் பரப்பி வருகின்றனர் .  இது  இன ஒழிப்பிற்கான முன் முயற்சியா ? எனும் சந்தேகத்தை முஸ்லீம்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .


               இந்த  பேரினவாத சக்திகள் தமது சமூக தொடர்பு சாதனங்கள் மூலம் முஸ்லீம்கள் தொடர்பான சம்பவங்களையும் சூழ்நிலைகளையும் இரட்டை தன்மையுடைய பார்வையூடாகவே பிரச்சாரப்படுத்துகின்றது .உதாரணமாக மியன்மார் தொடர்பாக இருட்டடிப்பை செய்ததோடு ; பங்களாதேஷ்  சம்பவம்  சம்பந்தமாக மிகைப்படுத்தளையும் செய்தது ! பங்களாதேஷ் விவகாரத்தில் மனித உயிர் சேதங்கள் இல்லை ;மற்றும் பங்களாதேஷ் அரசு நிலைமையை அவசரமாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை கூட இவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை .

                                       ஆனால் மியன்மாரில் அரச பயங்கர வாதத்தின் மூலம் மிகப்பாரிய சேதங்கள் முஸ்லீம்கள் மீது மேற்கொண்டது தொடர்பில் நீண்ட ஒரு மௌனமே பேணப்பட்டது ! அங்கு நடந்த 'அக்சனுக்கான , ரியாக்சன்'மௌனம் என்றால் இவர்களுக்கு அந்த விடயம் சம்மதம் என்ற முடிவிற்கே எம்மால் வரமுடியும் .

   இதோ இவர்களது போலித்தனத்திட்கு இன்னோர் உதாரணம் ஆப்கான் பம்மியன் புத்தர் சிலை யுடைப்பு விவகாரமாகும் .அதன் பின்னணி காரணம் பற்றி எதுவும் பேசாமல் எதோ நேற்று இவர்கள் கட்டியதை தாலிபான்  இன்று உடைத்தது போலவே விமர்சனம் செய்தார்கள் .அந்த சம்பவத்தின் காரணப் பின்னணி இதுதான் அதாவது ஆப்கானின் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடையை அமெரிக்க ஏகாதிபத்தியம் விதித்த  காரணத்தினால் அங்கு  கடுமையான பஞ்சம்  ஏற்பட்டது  .அப்போது அங்கு குழந்தைகள் போசாக்கின்மையால் வாடியிருந்த வேலை ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்த பம்மியன் சிலையை பராமரிக்க பில்லியன் கணக்கான டொலர்களை செலவு செய்ய முன்வந்தது !!! அதன் போது தாலிபான் அரசு அந்த பணத்தை போசாக்கின்மையால் அவதிப்படும் குழந்தைகளுக்கு செலவு செய்யுமாறு கோரிக்கை விடுக்க அந்த நிறுவனம் அவ் வேண்டுகோலை புறக்கணித்ததன் விளைவாகவே தாலிபான் அதை உடைக்கும் முடிவிற்கு வந்தது . எனவே இதுவும் ஒரு தெளிவான சீண்டுதலே இது பற்றி இந்த பேரினவாத மீடியாக்கள் பேசவே இல்லை .


                                  ஆனால் உண்மையை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அந்த சிலையை உடைக்கும் நோக்கம் முஸ்லீம்களுக்கு இருந்திருந்தால் அது உமையாக்கள் ஆட்சிக்காலத்திலேயே நிகழ்ந்திருக்கும் ஏனென்றால் கைபர் கணவாய் ஊடாக இந்தியாவின் தீய அரசர்களை வேட்டையாட தளபதி முஹம்மது பின் காசிம் படை நடத்தி வந்ததும் இந்தப்பகுதியால் தான் . முஹலாயர் ஆட்சியின் கீழ் ஆப்கான் பல ஆண்டுகள் இந்த பிரதேசம் ஆளப்பட்டுள்ளது .அப்போது கூட இந்த சிலை மீது ஒரு சிறு கீறலும் விழவில்லை . அதன் பின்னரான ஆப்கான் போரில் கூட இந்த சிலை உடைக்கப் படவில்லை நியாயமாக இதையெல்லாம் இவர்கள் பேசியிருக்க வேண்டும் . (குழிவெட்டி காத்திருப்பவனுக்கு குழிக்குள் வீழ்த்தும் பேச்சும் மன்னள்ளிப்போடும் எண்ணமுமே இருக்கும் .)

இந்த  பேரினவாதம் தெளிவாகவே முஸ்லீம் உம்மாவிடம் ஒரு செய்தியை சொல்கின்றது . அது இந்தியாவின் காவியணிந்த இந்துச்சண்டியர்களின் வழியில் யஹூதி ,நசாராவின் ஆசீர் வதிப்புடன் சிறுபான்மை  வாழ் முஸ்லீம்கள் மீது எல்லா வகையிலும் அத்து மீற தயாராக உள்ளோம் . என்ற எச்சரிக்கை செய்தியே அது .




No comments:

Post a Comment