முஸ்லிம்களாகிய எமக்கு இன்று
ஏற்பட்டுள்ள பலஹீனம் மற்றும் பின்னடைவு எல்லாம் இஸ்லாத்தின் எதிரிகளால் மட்டும்
ஏற்படுத்தப்பட்டவை அல்ல; அதில் எமது கரங்களால் நாமே ஏற்படுத்திய பங்கு அதிகமானது !! இப்படி நான் கூறவில்லை
'அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம் அது உங்கள் கரங்கள் சம்பாதித்தவைதாம் '(அல்குருஆன் மொழிபெயர்ப்பு அஸ் ஸூரா:வசனம் 30)
என அல்லாஹ் (சுப்) தனது திருமறையில்
கூறுகின்றான்.
அல்குர் ஆனில் நாம் தினமும் படிக்கும் வசனங்களான
'ஸூரா அல் பாத்திஹா' வில் இரண்டு கூட்டத்தைப்பற்றி எமக்கு எச்சரிக்கை செய்கிறான் ஒன்றை கோபத்திற்கு உள்ளானோர் என்றும் இரண்டாவது கூட்டத்தை வழி தவறியோர் எனவும் குறிப்பிட்டு அவர்களை பின்பற்றக்கூடாது என எச்சரிக்கின்றான் இந்த வார்த்தைகள் காலத்தால் வரையறுத்தவை அல்ல ஒரு நீண்ட போராட்டத்தை நோக்கிய மிகத்தெளிவான முன்னறிவித்தல் ;மற்றும் எச்சரிக்கை !!உண்மையில் நடந்ததுள்ளது என்னவென்றால் நாங்கள் அவர்களை பின்பற்றுகின்றோம் .
அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள்
குறிப்பிடுகின்றார்கள் சாணுக்கு சாண் முழத்துக்கு முழம் அவர்களை பின்பற்றுவீர்கள் ;அவர்கள் உடும்பின்
பொந்தில் நுழைந்தால் நீங்களும் நுழைவீர்கள் ;என்று கூறியபோது சஹாபாக்கள் கேட்டார்கள்
யூத , கிறிஸ்தவர்களையாகூறுகின்றீர்கள் ?! எனக்கேட்டபோது வேறு
யார் ?!! என பதில் தந்தார்கள். (புஹாரி ,முஸ்லிம் )
இந்த நபிமொழி விளக்குவது என்ன ? யூத ,கிறிஸ்தவர்கள் இறை மறுப்பு
சிந்தனைகளையும் வழிமுறைகளையும் பிறப்பிக்கும் உற்பத்திக்கூடங்கள் என்பதை அல்குர்
ஆனும் அதை நீங்கள் வாங்கி அவர்களைப்போல் ஆகிவிட வேண்டாம்! என அல்லாஹ்வின் தூதரும்
(ஸல் ) எச்சரித்திருக்க நாங்கள் செய்வது மார்க்க வழிகாட்டளை உலக விடயங்களில் இருந்து
பிரித்து நோக்கும் தவறான வழிமுறையினை மிகச்சாதரணமாக பின்பற்றி இது 'துன்யா' விடையம் இது 'ஆஹிரா ' விடையம் என பிரித்து 'வஹி' வழிகாட்டளை சர்வசாதரணமாக புரந்தள்ளிவிட்டோம்!! விளைவு இஸ்லாம் மார்க்கம் ஒரு மதமாக
சுருக்கப்பட்டு தனி மனித சுதந்திரமாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுவிட்டது!!!
அரசியலா ?? அதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பேயில்லை
!! என ஒரு எங்களில் ஒரு கூட்டமும் , எவ்வாறான அதிகாரமும் ,அதிகாரபீடமும் இருக்கமுடியும் ஆனால்
இஸ்லாமிய சரீயாவின் சட்டப்பகுதிகளை அமுல் நடாத்தினால் போதும் !! என எங்களில் ஒரு
கூட்டமும், சகோதரத்துவம் இரண்டாம் பட்சமான நாடுகள் எனும் தேசிய எல்லைகளும் , அதனால் முட்டாள் தனமாக சிறுபான்மை
நிலையெடுத்து குப்பார்களால் துன்புறுத்தப்படும்போது தடுக்க நாதியற்று பார்த்துக்கொண்டிருப்பதும்.நாங்களாகவே தேடிக்கொண்டவைதான்!!
(அதாவது குப்பார்களின் பாம்பை எமது சாரத்துக்குள் எடுத்து விட்டு கொத்தும்
போது மட்டும் கதறுவது முட்டாள்தனம் .)
எமது இன்றைய தேவை ஒரே தலைமை ஒரே தலைவர்
அது இஸ்லாத்தை மட்டுமே நூலும் பிசகாமல் அமுல்நடாத்தக்கூடியதும்,எமது வெற்றிப்படிகளில் தவ்வாவின் மூலமும் ஜிஹாதின் மூலமும் எடுத்துச்செல்லும் இஸ்லாமிய
கிலாபாவும் முஸ்லிம்களின் ஒரே அமீரான கலீபாவும் தான். இந்த அரசியல் தான் அல்லாஹ்
(சுபு ) முஸ்லிம்களுக்கு தந்துள்ள ஒரே உலகியல் பாதுகாப்பு . இனி கஆபாவை இடிக்க இன்னொரு ஆப்ரஹா வந்தாலும் அபாபீல்கள் தடுக்க வராது ! அந்தப்பனியும்
எம்மீதே சுமத்தப்பட்டுள்ளது !!! இது ஓர் அதிமுக்கிய விடயமாகும் .
mashallah
ReplyDelete