மனித அடிமைத்துவத்தின் அநீதியின் மத்தியில் இது எமக்கு இன்னொரு பெருநாள் !அசத்தியம் அதிகார சக்தியாகி சத்தியத்தை சாத்தியமற்றதாய்காட்டி நிற்கும் நிலையில் எமக்கு இன்னொரு பெருநாள் !கொலை கொள்ளை பலாத்காரமென ஜாஹிலீயத் எம்மீது அத்துமீறும் நிலையில் எமக்கு இன்னொரு பெருநாள் !இப்ராஹீம் (அலை ) இன் தியாகத்தை மிம்பரில் முழங்கி தீமையை எதிர்க்க திராணியற்று கொல்லையில் ஒழிந்துவெள்ளைச் சாரத்தை சமாதானக் கொடியாய் காட்ட முண்டியடித்து பாயும் நிலையில் இது எமக்கு இன்னொரு பெருநாள் !
ஈத் முபாரக் .............
No comments:
Post a Comment