சடவாத போதையில் மூழ்கி சாத்தானியத்தை
சகோதரன் ஆக்கியபின் அவன் சதித்தனத்தில்
கோடரிக் காம்பானத்தில் கோரமானது
இந்த உம்மாவின் உயிரோட்டம் !
துரோகத்தை தூய சரிதையாக எழுத நினைப்பது
எதிரியின் நாச வரிகள்! நீ குளிப்பாட்டி
கத்னா செய்து குப்ருக்கே குப்ர் கலிமா சொல்லி
நடுவீட்டில் குந்த வைத்திருக்கும் இந்த
நவீன இப்னு சபாக்கள் தமது நேச முழக்கமாக
'இஸ்லாம் ஈகுவல் திமோகிரசி' எனும் போது நீ
அல்லாஹு அக்பர் என்பது
அடிமாட்டின் இறுதிக்கதறல் தான் !
உலோகாயுதம் எனும் சூழ்நிலைக் கடவுளிடம்
உளம் தாழ்த்திவிட்டு உதடு அசைவினில்
அல்லாஹ்வை (சுப) அழைப்பதால் சுவனம் கிட்டாது ! இந்த
அறியாமைக்கரையை அகற்றாதவரை
பச்சையம் தொலைத்த ஒளித்தொகுப்புதான்
உன் பிரார்த்தனைகள் !
No comments:
Post a Comment